ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
எப்போதும்
முகத்தில் இருக்கட்டும்
புன்னகை !
அகம் அழுதாலும்
முகம் சிரிக்கட்டும்
இன்பம் பிறக்கும் !
உடலை உருக்கும்
கொடிய நோய்
கவலை !
தனக்காக வாழ்பவை விலங்கு
பிறருக்காக வாழ்பவனே
மனிதன் !
அறிவாளியை
முட்டாளாக்கும்
பணம் !
வரவேற்பு
வழக்கொழிந்தது
தொலைக்காட்சித் தொடர் !
வாடிய பயிர் கண்டு
வாடினேன்
வந்தது மழை !
கவனமின்மை
சில நொடி
விபத்து !
சிந்திக்க வேண்டாம்
எதிர்மறை சொற்கள்
முடியாது நடக்காது !
நாளை என்பது உறுதியன்று
இன்று என்பதே உறுதி
நன்றை இன்றே செய்க !
உணர்க
அதிக உணவு
குறையும் வாழ்வு !
அறிக
இரைக்கும் கிணறு ஊறும்
சிந்திக்கும் மூளை சிறக்கும் !
பொன்னிலும் மேலானது
விலைமதிப்பற்றது
நேரம் !
.