ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

எப்போதும்
முகத்தில் இருக்கட்டும்
புன்னகை !

அகம் அழுதாலும்
முகம் சிரிக்கட்டும்
இன்பம் பிறக்கும் !

உடலை உருக்கும்
கொடிய நோய்
கவலை !

தனக்காக வாழ்பவை விலங்கு
பிறருக்காக வாழ்பவனே
மனிதன் !

அறிவாளியை
முட்டாளாக்கும்
பணம் !

வரவேற்பு
வழக்கொழிந்தது
தொலைக்காட்சித் தொடர் !

வாடிய பயிர் கண்டு
வாடினேன்
வந்தது மழை !

கவனமின்மை
சில நொடி
விபத்து !

சிந்திக்க வேண்டாம்
எதிர்மறை சொற்கள்
முடியாது நடக்காது !

நாளை என்பது உறுதியன்று
இன்று என்பதே உறுதி
நன்றை இன்றே செய்க !

உணர்க
அதிக உணவு
குறையும் வாழ்வு !

அறிக
இரைக்கும் கிணறு ஊறும்
சிந்திக்கும் மூளை சிறக்கும் !

பொன்னிலும் மேலானது
விலைமதிப்பற்றது
நேரம் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-May-14, 9:15 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 106

மேலே