என்பெறினு மாற்ற வலமிரார் - ஆசாரக் கோவை 24

முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால். 24 ஆசாரக்கோவை

பொருளுரை:

தன்னை விட பெரியராயுள்ளவர் தான் உணவருந்தும் பந்தியில் இருந்து உண்ணும் பொழுது அப்பெரியவர் உண்பதற்கு முன்னே தான் உண்ணார்.

அவருக்கு முந்தி எழுந்திரார். அவர்களை நெருங்கி யிரார்.

உண்ணுமிடத்தில் மிகுதியாக எல்லாச் செல்வமும் பெறுவதாய் இருந்தாலும் அவர்க்கு வலப்புறம் இருந்து உண்ணார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-14, 9:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே