நட்பெனும் பெயரற்ற மொழி

புகைப்படங்களில்
மட்டும்
இன்னும்
மின்னுகிறது
நாம்
விதைத்த
சந்தோசங்களின்
நிழல்..

எந்த
சுவாரஸ்யங்களும்
இல்லை தான்
என்றாலும்
சொல்லாமல்
இருந்ததாய்
நினைவில் இல்லை..

புன்னகைகளால்
மட்டுமே
நிரம்பிய
பொழுதுகளின்
மாலை வேளையினில்
கல்லூரி
வெளியே
தேநீருடன்
நின்று
மழை ரசித்தது...

படைசூழ
வலம்வருதலும்;
படிக்காத
தேர்வில்
எல்லோரும்
பெற்ற
தவறாத
வெற்றியும்...

சரியாக
ஞாபகமில்லை
தோழி
ஆனால்
பேசிவிட்டு
கடந்துசென்ற
தருணங்களில்
எல்லாம்
நீ
சூடிய
பூவின் மணம்
விட்டுப்போனதில்லை
அவ்வளவு
எளிதில்..

அப்படியே உன்
யதார்த்தங்களின்
சிதறலாய்
இன்னும்
நீள்கிறது
நீ சூடியிருந்த
பூக்களை
காணும்
போதெல்லாம்...

ஒரு ஜன்னலோர
பயணத்தின்
கானலாய்
தொடர்பற்ற
காட்சி போல
இன்னும்
எத்தனை
பின்தொடரும்
நினைவுகளை
விதைத்து
செல்லும்
இந்த வாழ்க்கை...

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (13-May-14, 2:34 pm)
பார்வை : 177

மேலே