நேற்றால் இன்று

நாளை என்றொரு
நம்பிக்கை இன்றேல்
நாளும் வாழ்கை
எவ்விதம் நகரும் ?
மாற்றம் இதுவென
மனதில் தோன்ற
மருந்தொன் றுண்டு
என்றே இருந்தால் !

உனக்கதைச் செய்வேன்
எனக்கிதைச் செய்வாய்
உத்திர வாதம்
கையெழு த்தாகும்
உன்கதை என்கதை
செய்தவ னிருக்க
ஊடேயொப் புதல்
செய்திட லாமோ ?

நடப்பது யாவும்
நடத்திய தாலே
நடப்பதை யுணர
முயன்றவ ராரோ
நாளை எதுவென்
றறிந்திடு வாரே
நாளும் நடப்பைப்
பார்த்தி ருப்பாரே !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (17-May-14, 5:02 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே