எழுத்துப் பூக்கள்

அன்பின் பிறப்பிடத்தை
சொல்லிவிடுகிறது
மழலையின் புன்னகை!
~@~@~@~@~@~@~@~@~
மொழியின் இனிமையை
புரியவைத்துவிடுகிறது
குழந்தையின் மழலை!
~@~@~@~@~@~@~@~@~
இயல்பே அழகென்பதை
உணர்த்திவிடுகிறது
பிஞ்சுவின் வெற்றுடம்பு!
~@~@~@~@~@~@~@~@~
மகிழ்ச்சியின் உச்சத்தை
தொட்டுவிடுகிறது
கள்ளமற்ற சிரிப்பு!
~@~@~@~@~@~@~@~@~
உணர்ச்சிகளின் தாக்கத்தை
வெளிப்படுத்திவிடுகிறது
மழலையின் நடத்தை!
~@~@~@~@~@~@~@~@~
வளர்ந்தவர்களின் கர்வத்தை
உடைத்துவிடுகிறது
சிறுவர்களின் பேச்சு!
~@~@~@~@~@~@~@~@~
வாழ்வின் அர்த்தங்களை
விளக்கிவிடுகிறது
பிள்ளைகளின் விளையாட்டு!
~@~@~@~@~@~@~@~@~
விளையாட்டின் குதூகலத்தை
காட்டிவிடுகிறது
குழந்தைகளின் உற்சாகம்!
~@~@~@~@~@~@~@~@~
வெகுளித்தனத்தின் உச்சத்தை
காட்டிவிடுகிறது
பிஞ்சுகளின் நட்பு!
~@~@~@~@~@~@~@~@~
பெற்றோர்களின் உலகத்தை
புதுப்பிக்கிறது
பிள்ளைகளின் புதுமைகள்!
~@~@~@~@~@~@~@~@~
அன்பின் வேர்களை
நீரூற்றிக்காக்கிறது
வெள்ளைமனதின் வார்த்தைகள்!
~@~@~@~@~@~@~@~@~
மனிதர்களுக்கு மனிதத்தை
அறிமுகப்படுத்துகிறது
மழலைகளின் உலகம்!