எழுத்துப் பூக்கள்

அன்பின் பிறப்பிடத்தை
சொல்லிவிடுகிறது
மழலையின் புன்னகை!

~@~@~@~@~@~@~@~@~

மொழியின் இனிமையை
புரியவைத்துவிடுகிறது
குழந்தையின் மழலை!

~@~@~@~@~@~@~@~@~

இயல்பே அழகென்பதை
உணர்த்திவிடுகிறது
பிஞ்சுவின் வெற்றுடம்பு!

~@~@~@~@~@~@~@~@~

மகிழ்ச்சியின் உச்சத்தை
தொட்டுவிடுகிறது
கள்ளமற்ற சிரிப்பு!

~@~@~@~@~@~@~@~@~

உணர்ச்சிகளின் தாக்கத்தை
வெளிப்படுத்திவிடுகிறது
மழலையின் நடத்தை!

~@~@~@~@~@~@~@~@~

வளர்ந்தவர்களின் கர்வத்தை
உடைத்துவிடுகிறது
சிறுவர்களின் பேச்சு!

~@~@~@~@~@~@~@~@~

வாழ்வின் அர்த்தங்களை
விளக்கிவிடுகிறது
பிள்ளைகளின் விளையாட்டு!

~@~@~@~@~@~@~@~@~

விளையாட்டின் குதூகலத்தை
காட்டிவிடுகிறது
குழந்தைகளின் உற்சாகம்!

~@~@~@~@~@~@~@~@~

வெகுளித்தனத்தின் உச்சத்தை
காட்டிவிடுகிறது
பிஞ்சுகளின் நட்பு!

~@~@~@~@~@~@~@~@~

பெற்றோர்களின் உலகத்தை
புதுப்பிக்கிறது
பிள்ளைகளின் புதுமைகள்!

~@~@~@~@~@~@~@~@~

அன்பின் வேர்களை
நீரூற்றிக்காக்கிறது
வெள்ளைமனதின் வார்த்தைகள்!

~@~@~@~@~@~@~@~@~
மனிதர்களுக்கு மனிதத்தை
அறிமுகப்படுத்துகிறது
மழலைகளின் உலகம்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (17-May-14, 9:30 pm)
பார்வை : 568

மேலே