கண்ணீர்

நதியின் கல்லறை
கடலானால்
கண்ணீர் நதி
எங்கே சங்கமிக்கிறது?

அது
இதயத்தில் முகடுகளிலிருந்து
நதியாக நடந்து வந்து
விழி வாசல்களில்
பூக்களாக உதிர்கிறது

வாழ்க்கை அப்பூக்களைச்
சூடிக் கொள்கிறது

*

இந்த நதி
இளஞ்சூடு என்றாலும்
விழிக்கரைக் கனவுகள்
வெந்துவிடுவதில்லை

*

கண்ணீர் ஏன்
உப்புக் கரிக்கிறது?
துயரங்களைத்
துடைத்துக்கொண்டு வருவதாலா?

*


காலங்காலமாய் கண்ணீர்
தனக்காகவே அழுதுக்கொண்டிருக்கிறது
அழகிய விழிப்பிரதேசத்தின்
மவுன வெளியிலிருந்து
துரத்தப்பட்ட அகதியாய்...! (1995)

(தரையில் இறங்கும் தேவதைகள் நூலில்..1997)

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-May-14, 1:41 pm)
Tanglish : kanneer
பார்வை : 105

மேலே