காதல் ஏக்கம்

கண்கள் நீரால் தேங்க
கானலாய் எல்லாம் மாற
உடல் மெலிந்து
உருவம் தொலைத்து
கனவிலும் உன்னைத்
தேடுகிறேன்.

புள்ளித் திரையாய் உன் பிம்பம்
நிழலாய் என் எதிரில்..
தீண்டுகிறேன் - வளி
என் மனதிலோர் வலி.

அசரீரியாய் உன் குரல்
அண்டவெளியில் எங்கோ கேட்க
கணப்பொழுதும் என்
கவனம் இங்கில்லை
நிஜமெதுவும் என் நினைவிலில்லை .

தென்றல் சாரலாய் தீண்ட
உன் உணர்வுகள்
என் உயிர் தொட
என்று வருவாய் என
ஏக்கம் என்னுள்.

இன்றேனும்
சரீரம் வீழும் முன் வா.
நானன்றி நீயேனும்
என் முகம் காண..

எழுதியவர் : (20-May-14, 10:58 am)
Tanglish : kaadhal aekkam
பார்வை : 90

மேலே