ஏதோ ஒரு நம்பிக்கையில்

எத்தனை முறை தேர்தல் வந்தாலும்
ஏழைகளின் வாழ்வில் விடியல் வந்துவிடுமா
எத்தனை முறை போராடி
விடுதலை வாங்கினாலும்
ஏழைகள் எங்களுக்கு நீதியும்
விடுதலையும்
கிடைக்குமா?....

மறக்காமல் இப்பொழுது மட்டும்
வந்து போவர்கள் அரசியல் வாதிகள்
எங்கள் பக்கம்
ஏழைகள் எங்களின் ஓட்டும்
அவர்கள் ஜெயிக்க அவசியம் தேவை
என்பதால் என்னவோ ?
மேடைகளில் அனல் பறக்கும்
வார்த்தைகளையும்
அவர்கள் சொன்ன
உறுதி மொழிகளையும்
மீண்டும் நம்ப மனம் இல்லை ...
இருந்தாலும் ஒரு நம்பிக்கை
என்றாவது ஒரு மனிதன்
எங்கள் கண்ணிற் துடைக்க
வருவான் என்ற ஒரு நம்பிக்கையில் தான்
ஓட்டு போட நடக்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கை அல்லவா....

எழுதியவர் : (8-Mar-11, 7:46 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 391

மேலே