திருமண வாழ்த்து

வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.!

மேகமென்னும் கூந்தலினை
மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால்
மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம்
வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே..
அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள்.
கெட்டி மேளம் கொட்டிட தான்.

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

எழுதியவர் : ராஜேஷ் T . G (11-Jun-14, 2:26 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 257

மேலே