சுமத்ரா
சுமத்ரா ,திருமணம் நடந்து பத்து வருடங்கள்,இந்த விநாடி கடந்து போனது போல இருந்தது.இரு வீடு பெற்றோர்களின் விருப்பத்தின் மேல் நடந்த திருமணம்.அது சுமத்ராவுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லணும். ஏனெனில் இங்கு அதிர்ஷ்டம் சங்கீத்.
சுமத்ராவின் கடந்த காலம்,பல அதிர்வுகளையும், நெருக்கடிகளும் கொண்டதாகவே இருந்தது.
கொஞ்சம் திணறித்தான் போனால்.மனதளவிலும் சுருங்கித்தான் போயிருந்தாள்.காரணம் இளம் வயதில் நடந்த காதல் தோல்விதான்,சுமத்ராக்கு மட்டும் இதில் விலக்கு என்ன இருக்கு.அதிலிருந்து மீள பல தோல்விகளை கண்டாள்.அவள் பார்வை புத்தகத்தின் மேல் விழுந்தது.இதுவும் தற்காலிகமாக இருக்கும் என்றே தான் இருந்தாள்.ஆனால் அவளின் பார்வை கோணம் பறந்ததும், விரிந்தும் பல புத்தகங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தால்.அவள் அடுத்த அடுத்த புத்தகங்களை படிக்கும் போது,கடந்த கால அதிர்வுகளின் மீண்டு கொண்டு இருக்கும் போது அவளுக்கு திருமணம் நடந்து முடிந்தது.இப்பொழுது பதினாறு வருடங்களும் ஓடிசென்றது.
சங்கீத், தனக்கு சரியாக இருக்க வேண்டும் என அவள் இருக்கவில்லை,அவனுக்கு தகுந்தார் போல இருக்க விருப்பபட்டாள்.அவனும் அப்டித்தான் இருந்தான் ,இங்கிருந்து தான் அவர்களின் அதிர்வெண் ஒன்றி சென்று கொண்டுஇருந்தது,இருக்கிறது ,இதனால் என்னவோ திருமணதினத்தின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் பேசி புரிந்துகொண்டதை விட மௌனத்தின் வழியாக அதிகமாக பேசிகொண்டார்கள் .
சங்கீத்திக்கும் புத்தகத்திற்கும் இடைவெளி அதிகம்,ஆனால் புத்தகம் படிப்பவர்களை மதிப்புகொள்பவன். அதனால் என்னவோ சுமத்ரா மீதும் ஒரு தனி மதிப்பு.
சுமத்ரவும் அதேபோல இலக்கிய உலகக்கும்,குடும்ப வாழ்க்கைக்கும் ஒரு எல்லை வைத்து இருப்பவள்.அந்த எல்லை கோட்டிற்கு நடுவிலே இருப்பாள்.சங்கீதிடம் ஒருநாளும் தன் புத்தக அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவே இல்லை.அவனும் கேட்பதாகவும் இல்லை.
இருவரும் தன் ஊடல் மற்றும் கூடலில் போதும் உடலளவிலும் மனதளவிலும் சிறுதுளி வலி யாருக்கும் இருக்க கூடாதுன்னு தீர்மானித்து இருந்தனர்.அதனாலே மற்ற குடும்பத்தை போல வேற்று இருந்தனர்..
"என்னடா இவ்ளோ சந்தோசமா இருக்கறீங்க னு சொல்றீங்க ஆனா வீட்ல ஒரு குழந்த சத்தத்த காணோம்" என்றான் வசந்த்
இந்தமாதிரி கேள்விகளுக்கு சங்கீத் எப்பவும் தன் வார்த்தைகளை வீணடிப்பதில்லை.அதன் எதிரொலி வீடுவரைக்கும் என்றுமே சென்றதில்லை.இருந்தாலும் அவனுக்கு சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது,அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவன் மேல் பழிசொல்லை வீசுவதில்லை.
அந்த நேரத்திலெல்லாம் சுமத்ராவையே குழந்தையாக பாவித்துகொள்வான்,இதனாலேயே அவள் மீதுஎப்பொழுதும் கோபம் வந்ததேயில்லை.
அன்று சிறிது களைப்புடன் வீடு திரும்பி கொண்டு இருக்கயில் செல்போன் அலறதொடங்கியது.
"சொல்லும்மா " என்றான்."சங்கீத் இங்க நம்மூர்ல ஒரு பழைய அந்த காலத்து வைத்தியர் இருக்காருடா நீ அவள கூட்டிட்டு வர்ரியா,அவரு எல்லாத்தையும் சரி பண்ணிடுவாருடா,ரெண்டு வாரம் தான், கோவிச்சுக்காம வாங்கடா"இதை அவனிடம் குறைதபட்சம் சொல்லமுடியதாளவுக்கு சொல்லிருப்பாள்
போல்,அதையும் சலிக்காமல் கேட்டுக்கொண்டு இருந்தான்,அவனுக்கு புரியவும் செய்தது தன் அம்மாவின் ஆசையும்,அக்கறையும்."சரிம்மா வரோம் நீ உடம்ப பார்த்துக்கோ " என்று சொல்லிமுடித்தநேரத்தில் வீட்டை அடையும் நேரத்தில் மழை பொழிய அறிகுறிகள் தென்பட்டது.
சுமத்ரா எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் பிடித்ததில் ஒன்று.அன்றும் வீடு அப்டியே இருந்தது.சங்கீத் தன் வெளி அணிகலன்களை கழற்றிவைத்து விட்டு மாடிக்கு சென்றான்.சுமத்ரா ஊஞ்சலின் ஒரு முனையில் சாய்ந்து கால்நீட்டி படித்துகொண்டு இருந்தாள்.சங்கீத் வந்திருப்பதை அறிவாள் அவள்.சங்கீத் அவளிடம் பேச எத்தனித்தபோது படித்துகொண்டு இருப்பவளை திசை திருப்ப விருப்பமில்லாமல் ஜன்னலின் ஓரத்தில் நின்று கம்பிகளின் கண்ணாடி வழியாக ஒவ்வொவொரு மழைத்துளியும் எண்ணுவதுபோல ரசித்து கொண்டு இருந்தான்.
சுமத்ரா கிழறங்கி சென்றாள்.அடுத்த ஐந்து நிமிடத்தில் தன்னை அலங்கரித்து கொண்டு இரண்டு காப்பி டம்பளருடன் வந்து அவன் பின்னாடி நின்று இருந்தாள்.ஏனெனில் அவனுக்கு மழையுடன்,தன் மனைவிடம் பேசுவதை விருப்பமாகவே கொண்டுஇருந்தான்.இந்த நேரத்தில் தான் அவர்கள் அதிகமாக பேசுவார்கள்.அவளுக்கும் இதில் விருப்பம்தான்.
"அம்மா போன் பண்ணிருந்தாங்க,எப்பவும்போலத்தான்.நானும் எப்பவும் போல வரோம்னு சொல்லிருக்கேன்."
மழை இப்பொழுது கனத்து இருந்தது."சங்கீத் இந்ததடவ போலாம் என்றாள்"என்று சொல்லி ஊஞ்சலில் அமர்ந்தாள்"மழை பொழியும் திசை நோக்கி
இருவரின் காப்பின் அளவு குறைந்தும் இருந்தது."வேணாம் கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் போய்க்கலாம்"என்றான்
சங்கீத், அருகில் வந்து சுமத்ராவின் இடது தோளின் தலையை சாய்த்துகொண்டான்..சுமத்ராவின் கைகள் சங்கீதின் கைகளை பற்றிகொண்டாள்."இப்டியே இருந்துரலாம் டா "என்று அவளுக்கும் சொல்ல ஆசைதான், ஆனால் சங்கீத் அம்மா முகம் சற்றென்று வந்துசென்றது.சங்கீதுகும் அதேதான் "இப்டியே இருந்துரலாம் சுமத்ரா" என்று.அவர்களின் புரிதல்கள் இன்னும் குறையவேயில்லை
சங்கீத் சுமத்ராவின் காதுமடலின் நெருக்கத்தில் "காப்பி இன்னைக்கு ரொம்ப நல்லாஇருக்கு"
இது சுமத்ராவுக்கு பழக்கபட்ட வார்த்தைதான் எனினும் இதை சொல்லும்போதும் எல்லாம் அவனுக்கு
ஒரு முத்தம் கொடுக்க பட்டு இருக்கும்.அது இடத்தை பொருத்து ,கன்னத்திலோ அல்லது உதட்டிலோ கண்டிப்பா இருக்கும்.அன்று உதட்டினில்
மழையின் அளவு சற்று தணிந்தே இருந்தது.ஊஞ்சலின் வேகம் கூடியது.சங்கீத் சுமத்ராவின் மடியினில் வீழ்ந்தான்.சுமத்ரா தன் கடைவாயை சங்கீதின் கன்னத்தில் வைத்து "சங்கீத் இத கேக்கணும்னு எனக்கு இஷ்டம் இல்ல,ஆனா கேக்காமலும் இருக்க முடியல,இதுக்கு முன்னாடி என்னை மாதிரி ஒரு பொண்ணு உன் வாழ்க்கைல கடந்து போயிருக்கங்களா?அவங்க இப்பவும் உன்னோட நினைப்புல இருக்கறாங்களா?இஷ்டம் இருந்தா சொல்லு இல்லேன்னா வேணாம் "என்று தன் கடைவாயை எடுத்தாள் அவனுக்கு வலிக்கும் என்று தெரியவே இருந்தது.
சங்கீத்க்கு இது ஆச்சர்யமான கேள்வியாக இருந்தது,இந்த கேள்வி சுமத்ரா கேக்கமாட்டாள் என்று நினைத்து இருந்தான் .அந்த ஆச்சரியத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சில வினாடிகள் எடுத்துக்கொண்டான். அதே நேரத்தில் யோசிக்கவும் செய்தான், சொல்லலாமா! வேணாமா! இதை சுமத்ரா ஏற்றுகொள்வாள்,இது அவளை காயபடுத்தி விடுமோ என்று பயந்து இருந்தான்,ஆனால் இதை மறைத்தால் அவளுக்கு நான் உண்மையாக இல்லை என்று உருத்திக்கொண்டே இருக்கும்,சொல்லிடலாம் அதையும் தெளிவாக சொல்லிடலாம் என்று இருந்தான்.
இப்பொழுது மழை குறைந்து அறை முழுவதும் சப்தமும் குறைந்து இருந்தது.காற்றில் ஈரப்பதம் அதிகமாவே இருந்தது,அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையாகவும் இருந்தது.
சுமத்ரா அவன் என்ன சொல்லுவான்? என்று எதிர்பார்ப்புடன் இருந்தாள்.ஆனாலும் சிறிய பயமும் இருந்தது, தேவை இல்லாம பழைய நினைவுகள கொண்டுவரபோரோமே என்றே இருந்தாள்.
சங்கீத், சுமத்ராவின் மடியில் இருந்து விடுதலை அடைந்து , ஜன்னல் கதவின் ஓரத்தில் நின்று கொண்டான்.மழையின் மீதி துளிகள் சங்கீதின் கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தது.நாம் சொல்ல போகும் விஷயத்தில் சுமத்ராவை சிறிதும் காயபடுத்தகூடாது என்ற முடிவில் இருந்தான்.
சுமத்ரா மறு ஜன்னல் கதவின் ஓரத்தில் நின்றுகொண்டாள்."சொல்லு சங்கீத் நா ஏதும் நினைச்சு வருத்தப்படலாம் மாட்டேன்,இந்த கேள்விய கேக்கறது முன்னாடியே நா நல்லா தின்க் பண்ணிட்டேன்,நீ எத சொன்னாலும் ஏத்துக்கற மனநிலையல இருக்கேன்,நா வருத்தபடுவேன்னு நினைக்கலாம் வேணாம்"என்று சங்கீதுக்கு தைரியம் குடுத்தாள்.மீண்டும் அதே மீதி மழை துளிகள் அவள் முகத்தில் விழுந்தது.
சங்கீத்க்கு சற்று தைரியம் வந்தது,"அவங்க பேரு வாஹினி ,என் கிளாஸ்,காலேஜ்ல படிச்ச பொண்ணு,ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாத்தான் இருந்தோம்,திடிர்னு அவங்க ஒரு நாள் என்கிட்ட சொல்லாம ஊருக்கு போய்ட்டாங்க என்னமோ மாதிரி இருந்துச்சு,அடுத்து அவங்க வரப்ப கன்னத்துல ஒரு அரை விட்டு இப்டி பண்ணாத சொல்லலாம்னு இருந்தேன்,அதேபோல அவங்க வந்தாங்க, நா போனேன் அடிவைக்கரதுக்கு, ஆனா அவங்க எனக்கு முன்னாடி முந்திட்டாங்க அவங்க கை ரொம்ப நீளம்னு அப்பதான் எனக்கு தெரிஞ்சு.ஏன்டா என்னை தேடி வரலைன்னு கேட்டாங்க."ஆனா எனக்கு வலிக்கவேஇல்ல,ரெண்டு பேருக்கும் புதுசா இருந்துச்சு,லவ் இப்டித்தான் இருக்கும் போல ,ஒரு மிதப்பு, அதுலயே இருந்தோம்,காலேஜ்ம் முடிஞ்சு ,லவ் கண்டிப்பா முடியாது நினைச்சோம்.
என்னனோமோ நடந்துருச்சு,அவங்க போய்ட்டாங்க கண்ணுக்குதெரியமா, இடைல நம்ம வசந்த் சொன்னான் திருச்சில பார்த்தானாம்,அதுக்கப்றம் நா கேட்டுக்கவும் இல்ல,ஆனா அவங்க என்னை அளவுக்கு அதிகமா லவ் பண்ணதாலோ என்னோவோ பிரிஞ்சுட்டோம்.ஆன ரெண்டும் பேரும் கடைசி வரைக்கும் லவ் பண்றேன் னு சொல்லவே இல்ல.
"இத ஒரு நாள் உன்கிட்ட கண்டிப்பா சொல்லிடணும்னு நினைச்சேன்,இத நீ எப்டி எடுத்துப்ப,ஒரு சின்ன பயம் வேற" சங்கீத் சுமத்ராவின் அருகில் சென்றான் "இன்னைக்கு உன்னோட மதிய சாப்பாடு நல்லாஇருந்துச்சு"என்றான் அவனுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்தது இவள் தன்னை விட்டு விலகி சென்றுவிடுவாலோ என்றில்லை,அவள் வருத்தபட்டுவிடுவாலோ என்ற ஒரு பயம் மட்டுமே.ஏனெனில் அவள் கண் வழிவதை ஒருநாளும் அவன் விரும்பியதில்லை
அவன் சொன்னதுக்கு எப்பவும் போல பரிசு கிடைத்தது ,இந்தமுறை அவன் உள்ளங்கையில்
அவன் என்னவெல்லாம் நினைத்து இருந்தானோ ,அதுவே இவளும் நினைத்து இருந்தாள்.
இவளிடம் இருந்து எந்த கேள்வியும் வரவில்லை,அதை அவனும் எதிர்பார்த்து இருந்தான்.மழையும் ஓய்ந்து, கன்னத்தில் படும் துளிகளும் வற்றின.இருவரும் அன்று இரவு ஊஞ்சலில் ஆக்ரமித்து கொண்டனர்.சுமத்ரா ஆழ்ந்த யோசனையுடன் இருந்தாள்,அதற்கு சரியான முடிவு எடுத்த பின்தான் அவளுக்கு உறக்கமே வந்தது.
அடுத்தநாள் ஞாயறு என்பதால் நேரம்கழித்தே எழுந்தான் சங்கீத்.சுமத்ரா வெளியே செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தாள்."சங்கீத் ப்ரஷ் பண்ணிட்டு,குளிச்சுட்டு வா சாப்டலாம்"என்று கூறி சமையல் அறைக்குள் நுழைந்தால் சுமத்ரா" அவனுக்கு எதோஒருமாதிரி இருந்தது.சாப்பிடும் போதும் ஏதும் கூற வில்லை சுமத்ரா.
கைகழுவும் போது "நாம வாஹினிய பக்கபோறோம்,காலைல வசந்த்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டேன் " என்றாள்.சங்கீத்க்கு கோவம் இவள்மேல் ஏனோ வரவே தோணவில்லை.
"இன்னைக்கு சாப்பாடு சுத்தமா நல்லா இல்லை"என்றான் கோபம் வெறும் வார்த்தையில் மட்டும் இருந்தது,ஆனால் அவன் எதிர்பார்க்கவே இல்ல அவன் கன்னத்தில் விழுந்தது எப்பொழுதும் போல பரிசு.அவன் சுமத்ராவிடம் வாக்குவாதம் நடத்த விரும்பவேயில்லை,இருந்தாலும் அவளை சமாளிக்க முற்பட்டான்.
"ஹே அறிவு சுமத்ரா நீ என்ன பேசரைன்னு புரிஞ்சுடுதான் பேசறயா,நாம எதுக்கு அங்க போகணும்,ஒரு சரியான காரணம் சொல்லு,அப்டி நீ சொன்னாலும் நா வரமாட்டேன்."இந்தமுறை கோபம் அவன் கண்களில் தெரித்தது.ஆனால் அவள் ஒருமுடிவோடுதான் இருந்தாள்
சுமத்ரா அவன் அருகில் வந்து "எனக்கு தெரியும்டா,நா உன்னை எப்பவும் யாருக்காவும் விட்டு தரமாட்டேன்.இது என்னோட சந்தோசத்துக்கு,இதுல விருப்பம் இல்லைன்னு உனக்கு தெரியும்,ஆனா என்னைகாவுது வாஹினிய பாக்காம போய்டுவோமா,அப்டின்னு ஒரு ஏக்கம் உன் மனசுல இருக்கும்,அந்த சின்ன சந்தோசத்தகூட நா தரலேன்னா எப்டி.நா நல்லா யோசிச்சு முடிவு பண்ணிருக்கேன்.அவங்கள பார்த்ததுகப்ரமும் உன்கிட்டயும் என்கிட்டயும் எந்த வித்தியாசமும் இருக்காது.நம்ம சொந்தகாரவங்க வீட்டுக்கு போறது போல போயிட்டு வரலாம் " என்றாள்
சங்கீத் பாதிமனதொடு இருந்தான்.சுமத்ரா எப்பவும் போலவே இருந்தாள்,இன்றைக்கு அவள்தான் ஓட்டுனராக இருந்தாள்,அவனுக்கு வீட்டின் அருகில் செல்ல செல்ல இதை எப்படி எதிர்கொள்ளபோறோம்,அங்கே என்ன நடக்க போகும் என்ற ஒரு பயத்தினுள்ளே இருந்தான்.வாஹினுக்கு கல்யாணம் ஆகிருக்குமோ, கஷ்டபடுவாலோ என்ற மனஒட்டத்தில் போட்டிபோட்டு கொண்டு இருந்தான்.சுமத்ரா தன் கையை பற்றினால் "வீடு வந்துருச்சு,உள்ளே போலாம்" என்றாள்
காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டின் முன் நின்று அழைப்பு மணிக்கு உயிர் கொடுத்தாள் சுமத்ரா.
வீடு கொஞ்சம் சிறியதாகவும்,தேவையனளவுக்கும் இருந்தது,சங்கீத் இப்பொழுது பயம் குறைந்து அவளை பாரக்கபோகும் தருணத்தை ரசித்துக்கொண்டு இருந்தான்.
அது வாஹினிதான்,அதே உடல்வாகு,கண்கள் மேலும் அழகாகவே தெரிந்தது,குழந்தை இருக்கும் போல,சங்கீத்க்கு ஒரு நிமிடம் கடந்த காலம் வந்து வந்து போய்கொண்டுஇருந்தது.இந்த முறை இருவரின் கைகளும் நீளவே இல்லை.
"சங்கீத் எப்டி இருக்க,எவ்ளோ நாள் ஆச்சு,மனுஷனாட நீ , உயிரோடு தான் இருக்கியா ,உள்ள வாங்க உள்ள வாங்க "சில வசைகளோடு விசாரிப்புகளும் இருந்தது அதே அன்போடுதான்.
சங்கீத் சுயநினைவுக்கு வந்தான்."நா நல்லா இருக்கேன்,இவங்க என் சுமத்ரா, கல்யாணம் ஆய்டுச்சு, நீ எப்டி இருக்க,"என்றான்
"நா நல்லா இருக்கேன் பார்த்தா எப்டி இருக்கேன்,இந்த பத்து வருஷம் ரொம்ப மாத்திடுச்சு, உட்காருங்க" என்று டிவி முன் உள்ள சொகுசு இருக்கையில் புதைந்து கொண்டனர்
சுமத்ராவிடம் "சங்கீத் எப்டி பேசறான,ஊமையா இருப்பான்,பேசவேமாட்டான். ஆனா பேசினான எல்லோருக்கும் பிடிச்சுரும்." இல்ல என்கிட்டே நல்லாத்தான் பேசுவாரு "சுமத்ரா எங்கயும் விட்டுதரமட்டாள் அவனை.
" எங்க யாரும் காணோம் ,எத்தன குழந்தை ?"சங்கீத் அக்கறையுடன் கேட்டான்
"ஒரு பையன், அவரு கடைக்கு போயிருக்காங்க அப்பாவும் மகனும் ,நீங்க வர்றது முதல்லேயே தெரிஞ்சுஇருந்தா பரவால,சரி விடு நீங்க ரெண்டு பேரும் இருந்து சாப்டு தான் போகணும்,ஆமா அட்ரஸ் எப்டி கிடைச்சுது?"
"வசந்த் தந்தான்","
"நா அவன எப்பவோ பாத்தது இப்பதான் கேட்டுஇருக்கீல" என்றாள் வாஹினி
"இத நா இப்டியும் கேக்கலாம் நீ ஏன் அவன்ட எங்க அட்ரஸ் வாங்கலைன்னு "என்று மடக்கினான். சங்கீத் , சுமத்ரா விடம் கேள்வி ஏதும் கேட்க விருப்பமும் இல்லை.
அழைப்பு மணி மறுபடியும் அலறியது "இதோ அவங்கதான். அவங்க உங்கள பார்த்தாங்கனா ரொம்ப சந்தோசபடுவாங்க"என்று கூறிகொண்டே கதவை திறந்தாள்.சுமத்ராவின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தனர் அவர்கள் பேசும்போது சுமத்ராவிற்கு இந்த பேச்சு சப்தம் பழக்கப்பட்டதாக இருந்தது.வாஹினி ,சங்கீத்தை பற்றி சொல்லிகொண்டே சுமத்ராவின் முன்னால் வந்தார்கள் வாஹினின் குழந்தையும் கணவனும்.
சுமத்ராவின் கண்களை ஒருநொடி நம்பவே இல்லை,அந்த ஒருநொடியில் இவர் வருணாக இருக்க கூடாது என்று வேண்டிகொண்டாள்,இல்லை அது வருண் தான்.சுமத்ராவின் நெஞ்சில் அதே அதிர்வலைகள் அதை விட மோசமாக அவள் உடல் முழுவதும் பரவி அவளை வலிமையற்றவலாக இருக்க செய்தது.வருண் இதை பெரிதாக அலட்டிக்கொள்ள விரும்பவில்லை,எப்பொழுதும் போல தெரியாதவன் போல காட்டிகொண்டான்.இதை ஒருநொடி சங்கீத் கவனித்து கொண்டான்.
"இவங்க சங்கீத்,சுமத்ரா.சங்கீத் என்னோட கிளாஸ்,காலேஜ்ல கூட படிச்சவன்,எங்க ஊரு,நம்ம கலயாணத்துக்கு வரல அதன் உங்களுக்கும் தெரில்ல," என்று அறிமுகபடுத்தி கொண்டுஇருந்தார்கள் "
சுமத்ராவிற்கு இவர்கள் பேசுவது ஏதும் கேக்கவேயில்லை,அவள் அந்த இடத்திலிருந்து விடுபட சிறகை விரிக்க அவளிடம் சிறகு இல்லை,இனி யாரை பார்க்க,நினைக்க கூடாது என்று நினைத்தாலோ அவனையே பாக்க விதி செய்தது.வருண் சுமத்ரா பக்கம் திரும்பி கூட பார்க்கவேயில்லை.
சங்கீத்,வருண் ,வாஹினி எதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மட்டும் அவளுக்கு தெரிகறது.
சட்டென்று சங்கீத் "சரி வாஹினி,நாங்க வர்றோம் .வீட்ல இருந்து அம்மா வர்றாங்க,நா கண்டிப்பா போய்தான் ஆகனும்,கோவிச்சுக்காத இனி இங்கதான இருப்பிங்க நாங்க அடிக்கடி வந்து பாக்கறோம்"
வாஹினி எவ்ளோ சொன்னாலும் சங்கீத் கேட்பதாகவே இல்லை,அவளும்" சரி" என்று விடுதலை தந்தாள்
சுமத்ராவிர்க்கு" சுமத்ரா ஏதும் பேசவேயில்லை ஏனெனில் சங்கீத் அடிகடி வருகிறோம் என்று சொல்லிருக்கான் இதை அவனிடம் எப்டி சொல்வது வருணை நான் காதலித்ததை,சுமத்ராவிர்க்கு
இந்த நாள் ஏன் வந்தது,சரி எப்பொழுது கடக்கும், இந்த நிகழ்வை எப்பொழுது மறக்கமுடியும் என்று யோசனை அவள் மூளை முழுவதும் நிரப்பிகொண்டது.
ஒருவழியாக அந்த இடத்தை விட்டு அகன்று காரினுள் அமர்ந்தாள்.இந்தமுறை சங்கீத் ஓட்டுனர் இடத்தை பற்றிகொண்டான்.கார் கொஞ்சம் தூரம் சென்று மரத்தின் நிழலின் நிறுத்தினான்,"சுமத்ரா இனி இவங்க வீட்டுக்கு வரமாட்டோம் என்றான்"சுமத்ரா அதுவரை தலைகுனிந்து யோசனையில் இருந்தவள் சட்டென்று அவன் கண்களை பார்த்தாள்."ஆமா இனி இந்த ஜென்மத்துல இந்த வீட்டுக்கு வரமாட்டோம்,எனக்கு தெரியும் ஆனா நீ சொல்லவேண்டாம்.அவ்ளோதான் சொல்வேன். இனி இங்க வரமாட்டோம், நீ சொல்லித்தான் தெரியனும்னு இல்லை நீ அங்க பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்,ஆனா நீ அத பத்தி என்ன ?எதுன்னு? விசாரணை நடத்த வேண்டாம்."சுமத்ராவின் கண்களின் நீரை பார்க்க விரும்பாமல் சங்கீத் திரும்பிகொண்டான்"
கண்களை துடைத்து கொண்டு "சங்கீத் நாம இப்டியே இருந்தறலாம்டா"இந்தமுறை சங்கீதின் அம்மா முகம் வரவேயில்லை,இவன்முகம் மட்டும் முழுவதும் தெரிந்தது.
சங்கீத் சுமத்ராவின் கையை பிடித்து "எனக்கு நீ மட்டும் போதும் ,இன்னைக்கு காலைல சாப்ட்ட சாப்பாடு திருப்தியா இருந்துச்சு"என்றான்
இந்த முறை பரிசு அவன் முகம் முழுவதும் பதிந்தது...........