நீயே நினைப்பாக
நினைவுகள்
சிரித்ததுண்டு.....!
நிஜமும் நடித்ததுண்டு......!
அசைவுகள் கொடுத்து விட்டு
அறியாமல் நடக்கிறாள்.....!
என் நிலப்பரப்பில் பூக்கின்றாய்
அருவறுப்பாய் பரவாயில்லை.....!
சிறுமுறைப்பு செய்கின்றாய்
அதுவும் கூட பரவசம்தான்.......!
பள்ளி வாழ்க்கை பாழாய் போனது
உனை எண்ணி வாழ்வதே
தேனாய் தோனுது..!
உள்ளம் கூட சிரிக்கிறது அதிகாரமாய்
வேடிக்கை பார்க்கிறாய் அலங்காரமாய்...
நீர்க்குமிழியாய் உடைகிறேன்
அதன் வெளிப்பாடு நீயல்லவா...!
உறக்கத்தில் விசும்புகிறேன்
தாலாட்டு நீ தாயல்லவா..!
கத்தரியால் வெட்டப்பட்ட என்
எண்ணம்
கிளைகளாய் விழுந்தது
உன் முன்னம்.....!