சீ, சீ இந்த பழம் புளிக்கும்

எட்டி, எட்டி பறிக்க முயன்று
முடியாதலால் திராட்சை பழம்
புளித்ததென்று சொன்ன கதை

எவருக்கும் பொருந்தும் வாழ்வில்
இந்த கதை

எது கூடுகின்றதோ, எது கிடைக்கின்றதோ
அது உன் வரையில் அமிர்தம்

எது தவிர்க்கின்றதோ உன்னை, எது
கை கூடவில்லையோ, அது விஷம்

இந்த மனநிலை கொண்டு விட்டால்
அனைவருமே, எந்த கவலையும் தான்
அண்டாதே யாரையுமே

உனக்கென்று உள்ளதை யாரும்
தட்டி பறிக்க இயலாது எத்தனை தான்
முயன்றாலுமே, உனக்கென்று இல்லாததை
யாரும் தர முடியாது எத்தனை தான் அவர்
விரும்பினாலும்

இது தான் உண்மை, உண்மைகள் சில
நேரம் கசக்கும், ஆனால் அது தான்
நிலைக்கும்

எட்டி, எட்டி உன் சக்தியை இழக்காதே
எட்டும் வரை பார்த்து, பின் விட்டு விடு
நிம்மதியை தொலைக்காதே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (5-Jul-14, 5:26 am)
பார்வை : 1028

மேலே