வாழ்வதின் பயன் வாழவைத்தல்

ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஓயாமல் புன்னகைக்கும் மலர்செடியே
அதை கற்றுக்கொண்டேன் நானும் உன்னிடம் ..

ஒன்றாக இறை தேடும் எரும்புக்கூட்டமே ஒற்றுமையை
கற்றுக்கொண்டேன் நானும் உன்னிடமே ...

தரம் பிரித்து பார்க்காமல் எங்கும் பாயும் தண்ணீரே
தாரள மனதை கற்றுக்கொண்டென் உன்னிடம்

ஆதாரமே அழியும் வேளையிலும் பயனை அள்ளி தரும் மண்ணே
தாய்மையின் குணத்தை பெற்றுக்கொண்டேன் உன்னிடம்

உயிர் பிரியும் போதினிலும் உரமாகி போகும் இலையே
தியாகத்தின் பலனை காண்கிறேன் உன்னிடம்

எத்தனை இடிகளையும் தாங்கும் மலையே
மனதிடத்தை கற்கிறேன் உன்னிடம்

மாறுவதை தவிர எதையும் கற்கவில்லை
மனித இனமே உன்னிடம்

எழுதியவர் : நிஷா (7-Jul-14, 12:03 pm)
சேர்த்தது : நிஷா
பார்வை : 80

மேலே