பவுர்ணமியாய் மலர்ந்த காதல் பூ

காதலர் தினம்
கவிதை கேட்கிறாய்
”நீயும் நானும் சந்தித்த நாள்”
உரைத்தது கேட்டு உவகை கொள்கிறாய்
பவுர்ணமியாய் மலர்ந்தது (காதல்) பூ
காணக்கிடைக்கா காட்சி
கண்டு கரைந்தது ”நான்”
காணாமல் போனது ”நீ”
அன்று முழங்கிய பறை
ஏனோ எவர் காதிலும்
பட்டுப் படற வில்லை