தவிக்கும் பைத்தியமாய்

உன்மீதான என் காதல் என்னவென்றும்,
அன்பு என்னவன்றும் சொல்வதற்கான
மொழியறிந்தும், அதற்கான வழி
தெரியாமல் தவிக்கிறேன்.......;
என்னைப்பற்றிய உன் எண்ணம் என்னவென்று
தெரியாமல்த் துடிக்கிறேன்...;
உன்மீது நான்கொண்ட காதலையறிந்த நீ,
அதன் ஆழம் அறியாத காரணம் என்ன????
என் காதலை காற்றைப்போல
இதமாக உணர்ந்தாயா,- இல்லை,
மலையின் எடையைப்போல
கனமாக உணர்ந்தாயா????
உன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத
என் இயலாமையை எண்ணிக் கலங்குகிறேன்........
உன்மீது நான்கொண்ட அன்பை எப்படி
உனக்கு புரியவைப்பேன்???
என் காதலின் ஆழத்தை எப்படி எடுத்துரைப்பேன்???
அன்று வார்த்தைகளை மட்டுமே மாலையாகத்
தொடுத்த நீயா,- இன்று என் வார்த்தைகளைக்
கேட்க மறுக்கிறாய்?????;- நீ என்னை
உதறித்தள்ளியத்தை அறிந்தும், என் மனம்
உன்னை எண்ணித் துயறுருவதும் ஏனோ???;
என் கண்ணை மறைத்து என்னைக் கலங்கவைப்பது
உன் காதலா??,இல்லை உன்மீது நான்கொண்ட
கண்முடித்தனமான நம்பிக்கையா???,
புரியாமல்த் தவிக்கிறேன் நினைவிழந்த பைத்தியம்போல்.......

எழுதியவர் : இலக்கியா.மு (12-Jul-14, 12:56 pm)
பார்வை : 84

மேலே