அழகான தேனிலவு

தேனிலவு என்னவென்று தென்றலிடம்......கேட்டறிந்தேன்
பால் கொண்ட பருவநிலவின் கனவே அது என்றது

தினம் தினம் தேனிலவாம்
மேகத்தோடு நிலவுக்கு.....அதனால்
தான் தேய்கிறதோ தேகம்
அழகு நிலவுக்கு

உண்மையான தேன் நிலவு
இளமையில் இல்லை என்றே
சொன்னது.
என்னை உரசி தென்றல்

என்ன அதன் காரணமோ
அதையும்....நான் கேட்டறிந்தேன்

காதல் என்று சொன்னவர்கள்
தேனிலவு முடிந்துவிட்டாள்
தேய்நிலவாய் வதைக்கிறார்கள்
அழகு பால் நிலவை புதைக்கிறார்கள்

இன்னும்
என்ன,....................... தேனிலவோ
பாவம் அந்த பெண் நிலவு....

உள்ளம் உணரும் தேனிலவே
அறுபதை தாண்டினாலும்
அழகான தேனிலவு

கள்ளம் இல்லா அன்புடனே
காதலை சொல்லும் - அந்த
முதுமையான தேனிலவே
முதிர்ச்சி கொண்ட தேனிலவு

இந்த அழகான அன்பினையே என்றும்
உற்று பார்க்கும் வான் நிலவு.................

(கோ...எழிலன்)

எழுதியவர் : கவிஞன் கோ.எழிலன் (13-Jul-14, 12:12 am)
Tanglish : azhagana thenilavu
பார்வை : 144

மேலே