இசைவின் அடையாளமோ

​வாசமிகு மலர் ​வாயிற்படியில்
----- வழிந்திடும் வாட்டத்துடன் !
ஏக்கமிகு பார்வையுடன் எழிலரசி
----- எண்ணத்தில் ஏழிசையோ !

சூடியுள்ள பூச்சரமும் தேடுகிறது
----- சூழலையும் புரியவைக்கிறது !
காத்திருக்கும் கன்னியோ கவலையில்
----- பூத்திருக்கும் கண்மலருடன் !

அசைவற்று அமர்ந்துள்ள நிலையோ
----- அலைமோதிடும் ஆசைகளுடன் !
அசையாத விழிகளின் கோலம்தான்
----- இசைவின் அடையாளமோ !

சுமந்திடும் கனவுகள் நினைவினில்
----- சுகம்தரும் சுமையோமனதினில் !
கற்பனை முன்னோட்டம் புயலாய்
----- களிப்போ சுனாமிவெள்ளமாய் !

அணங்கவள் ஆசையும் நிறைவேறிட
----- அன்போடுநாம் வாழ்த்திடுவோம் !
அளவிலா இன்பமுடன் இல்வாழ்வும்
----- நிலைத்திடநாம் வாழ்த்திடுவோம் !


​ ​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Jul-14, 9:31 am)
பார்வை : 174

மேலே