இசைவின் அடையாளமோ
வாசமிகு மலர் வாயிற்படியில்
----- வழிந்திடும் வாட்டத்துடன் !
ஏக்கமிகு பார்வையுடன் எழிலரசி
----- எண்ணத்தில் ஏழிசையோ !
சூடியுள்ள பூச்சரமும் தேடுகிறது
----- சூழலையும் புரியவைக்கிறது !
காத்திருக்கும் கன்னியோ கவலையில்
----- பூத்திருக்கும் கண்மலருடன் !
அசைவற்று அமர்ந்துள்ள நிலையோ
----- அலைமோதிடும் ஆசைகளுடன் !
அசையாத விழிகளின் கோலம்தான்
----- இசைவின் அடையாளமோ !
சுமந்திடும் கனவுகள் நினைவினில்
----- சுகம்தரும் சுமையோமனதினில் !
கற்பனை முன்னோட்டம் புயலாய்
----- களிப்போ சுனாமிவெள்ளமாய் !
அணங்கவள் ஆசையும் நிறைவேறிட
----- அன்போடுநாம் வாழ்த்திடுவோம் !
அளவிலா இன்பமுடன் இல்வாழ்வும்
----- நிலைத்திடநாம் வாழ்த்திடுவோம் !
பழனி குமார்