நீ என்ன எனக்கு யமனா

நீ என்ன எனக்கு யமனா ..?
-------------------------------------
என்னவளே
நீ பார்த்த நொடியே
பாசக்கயிறு எறிந்து விட்டான்
நீ என்ன எனக்கு யமனா ..?

அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த
மாயமான் போல் -நீ
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

எழுதியவர் : கே இனியவன் (17-Jul-14, 2:09 pm)
பார்வை : 66

மேலே