புலிகளை காப்போம்
கிளிகளைப் போலத்தான் புலிகளும்
சுதந்திரமாக சுற்றியது காட்டில்...
அழியாமல் காத்திட அதை,
அடைத்து விட்டோம் கூண்டில்...
வனத்தில் வாழ்ந்து பழகியது,
இனத்தையே மறந்து போனது !
கூண்டிற்குள் பிறந்த குட்டிப்புலி,
குதித்து விளையாடியது குரங்குடன் !
இருக்கும் புலிகளை மட்டுமாவது,
இயல்பு மாறாமல் பாதுகாப்போம் !!