உன் உயிரே சேர துடிக்கும் மனம் உன்னை கண்ட பின்பே துடிக்கும் இனி

நெடுந்தூரம் இருந்து கொண்டு நினைவில் மட்டும் நெருங்கி வருகிறாய்
கனவில் மட்டும் காதல் செய்து காலங்களை சேமிக்கிறாய்
கண்களிலே தேங்கும் நீரில் காதலை பயிர் செய்கிறாய்
நெருங்காமல் உயிருள்ளே ஊடுருவி வன்முறை செய்கிறாய்
வானத்தில் நின்றுகொண்டு வா என அழைக்கிறாய்
கை நீட்டி தொட நினைத்தால் இன்னும் நெடும்தூரம் செல்கிறாய்
தொலைவானது நம் உடல்கள் அல்ல -நம்
உள்ளங்கள் என்பதை எப்போது உணர்வாய்

எழுதியவர் : நிஷா (30-Jul-14, 7:01 pm)
பார்வை : 161

மேலே