மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
வின் மீன்கள் தோற்கும் உன் சிரிப்பில் !
ம் என்று ஏதோ நீ சொன்னால்
அம்மா என்றல்லோ என் செவி கேட்க்கும் !
பசியென்று மார்மீது நீ இதழ் வைத்தால்
ருசியென்று சுரக்குமடா இரத்தமெல்லாம் தாய்ப்பாலாய்
உற்ற பெண்மீது நீ கொள்ளும் மோகத்தால்
வற்றிடுமோ என் தாய்ப்பாலும் முதியோர் இல்லத்தில் !

எழுதியவர் : முகில் (1-Aug-14, 11:32 pm)
பார்வை : 194

மேலே