எங்கள் நட்பு


நட்பினை நாங்கள்
பந்தமில்லா சொந்தமென்போம்
சுத்தமான தென்றலென்போம்
கற்புடைய காதலென்போம்
உறவில்லா பங்காளிகள்
உள்ளத்தைப் பங்கிடுவோம்.....

உள்ளத்தினை உளவுசெய்து
உணர்வினை பயிர்செய்து
நட்பென்னும் பயிரினை
அன்பென்னும் ஆயுதத்தால்
அறுவடை செய்து
இன்பத்தில் திளைத்திருப்போம்
இணைந்தே வாழ்ந்திருப்போம் ......

நட்பினை அமரவைத்து
சுவாசத்தின் மூச்சினைக்
கையாய்க் கொண்டு
உஞ்சலினை ஆட்டிடுவோம்
உணர்வினை இணைத்திடுவோம்.........

தவறுகள் செய்தால்
தவறாமல் தண்டிப்போம்
நன்மைகள் செய்தால்
நன்றாய் ஆதரிப்போம்
உண்மைக்கு உதாரணமாய்
உலகத்தில் வாழ்ந்திருப்போம்
உயிரையும் கொடுத்திடுவோம் .........

சாகவரம் ஒன்று
நட்பிற்கு வேண்டுமென
இறைவனை வேண்டிடுவோம்......

எழுதியவர் : ரேணுகா (18-Mar-11, 3:03 pm)
சேர்த்தது : Renuka Srinivasan
பார்வை : 436

மேலே