கவிதை முடைய

மூளையைக் குடைந்து
வார்த்தை முடைகிறேன்
என் உள்ளக் குமுறலுக்கு-அது
கூரையாய் அமையட்டும்.

மனதை கிழித்து
முழ்கிப் பார்க்கின்றேன்
வேய்கின்ற கூரைக்கு -அது
கருவாய் அமையட்டும்.

மொழிகளே
மறிந்து போகாதீர்
என்னில் இல்லாமல்
விலகிச் செல்லாதீர்

கண்களை மூடினால்
கனவுகள் வரட்டும்
நினைவுடன் நான்
ரசிக்கும்படி.

கண்களைத் திறந்தால்
காட்சிகள் அமையட்டும்
கனவினில் நான்
நினைத்தபடி.

வேறொன்றும் தேவையில்லை
என்னக்கு
பேனாவில் "மை"
விதி விலக்கு

கவிதை
மு
டை
ய....








எழுதியவர் : அப்பாஸ் அப்துல் ரசக் (19-Mar-11, 1:27 pm)
சேர்த்தது : Appas Abdul Rajak
பார்வை : 417

மேலே