கல்லூரி கவிதைகள் 04

சோகத்தில்
சோர்ந்திருந்தேன்
தோளோடு
இன்னுமொரு தோள்
என் தோழியின் தோள்
ஏனடா கலங்குகிறாய்
தோழி நான் இருக்கையில்
என்றாள்....!!!

இன்று
சோர்ந்திருக்கிறேன்
தோள் தட்டி தர ஒரு
தோழமை இல்லாமல்
சோகங்களே தெரியாமல்
வாழும் காலம் கல்லூரி
வசந்தகாலம் ....!!!

கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (04)

எழுதியவர் : கே இனியவன் (11-Aug-14, 1:52 pm)
பார்வை : 200

மேலே