தமிழ்
தமிழ்
ருசிக்க ருசிக்க திகட்டா அமுது
எப்படி பிறந்தாள் என அறியாது
மதுரை சங்கத்தால் தத்து எடுக்கப்பட்டு
வள்ளுவனால் வளர்க்கப்பட்டு
நக்கீரனால் நளினபட்டு
அவ்வையால் சீராக்கப்பட்டு
அகத்தியனால் பக்குவப்பட்டு
தேனினும் இனிதானவளை
அழிவில்லா தேவதையை
காணாத தாயை கண்டது போல்
உருவமில்லா மகிழ்ச்சி யடைந்தேன்
அந்நிய தேசத்தில் அந்நியன் ஒருவன்
தமிழ் பேச!