நின் பாதம் சரணம்
விதியென்று வீழ்த்தியபோதும்
மதியென்று வந்த தெய்வம்
சதியென சாய்ந்தபோது
கதியென சரணடைந்தேன்
வழியென்று
ஒளியாய்
வந்த தெய்வம்
இருளென்று இன்னல்
தீர்த்து
அருளென்று வரம்
தந்து வாழவைக்கும்
தெய்வம்
நின் பாதம் சரணம் இறைவா!!!
இறைவா நின் பாதம் சரணம்!!