என்னவனே - நிலாமகள்

மனதில் பொங்கும்
ஆசைகளோடு எழுதுகிறேன்...

மரணம் வரை
வாழ நினைத்து...

பாதியிலே மாண்டு போன
என் காதல் பற்றி...

உன் விரல் பற்றி
நடக்க துடிக்கும்
என் விரல்கள்...

கை மாறப்போகும் காலம்
வந்துக் கொண்டிருக்கிறது...

உன் நிழலோடு
ஒன்ற நினைத்த
என் நிழல்கள்...

வேறொரு நிஜத்தோடு
சங்கமிக்கப்போகும் நேரம்
வந்துக் கொண்டிருக்கிறது...

உன் காதோரம்
நான் பேச வேண்டிய
கனி மொழிகளை
காற்றோடு அனுப்பி வைக்கிறேன்...

உன் மூச்சோடு
இணைத்து விடு...

காலமெல்லாம்
நீ உறங்க வேண்டிய மடியில்...

களவாடப்பட்ட என்
காதல் மடிந்துக் கிடக்கிறது....

உன் மனதில் நான் வாழும்
தருணம் ஒன்று கேட்டேன்...

நீ தராததால்
அதையும் நானே
எடுத்துக்கொண்டேன்
என் கற்பனையில்...

கற்பனையிலே
உன்னை காதலித்து...

கரம் பிடித்து
மோகத்தில் திளைத்து...

மழலைப் பெற்று
மனங்குளிர வாழ்ந்த எனக்கு...

வந்ததொரு சோதனை...

உன்னோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும்
எனக்கு வேறொரு வாழ்க்கை...

நிச்சயித்தப் பெற்றோரை
நிந்திப்பதா...?

உன்னை எனக்கில்லாமல்
ஆக்கிய விதியை நிந்திப்பதா....?

வாழும் நிமிடமெல்லாம்
உன் நினைவே...

காணும் இடமெல்லாம்
உன் முகமே...

நிஜமெல்லாம் தொலைத்து
நினைவுகளிலே வாழும் எனக்கு...

உயிருள்ள வரை
உன் காதல் உயர்ந்த பரிசு...!

எழுதியவர் : நிலாமகள் (21-Aug-14, 9:01 am)
பார்வை : 467

மேலே