பள்ளி பருவ தேடல் தெளிதல் வாழ்தல்
வாழ்க்கை பாடம் கற்க
வழி செய்யும் அறிவு
பாடத்தை கற்கும்
மாணவபருவத்தில்
நற்பண்புகளாகிய மதித்தல்
மரியாதை தருதல் ஈதல்
போன்றவைகளை நாளும்
கூட்டிட நல்ல முயற்சி
மேற்கொளல் தேவை
அகந்தை பொறாமை
பிறர் பொருள் அடைதல்
வன்மம் கோபம் போன்ற
ஒழுக்கமில்லாத வைகளை
உள்ளத்திலிருந்து கழித்திடல்
ஏற்றமிகு வாழ்விற்கு
உதவிடுமே கற்கும்
ஏட்டுச்சுவடியில் உள்ள
நல்நீதிக் கதைகளுடன்
நூலகத்திலும் ஆசிரியர்
கூறும் அறநெறிகதைகளையும்
மூத்தோர் சொல்லும் நல்வழி
மதித்து நாளும் நடக்க
முற்பட்டால் கிடைக்கும்
நற்பெயர் நம் மனதினில்
இன்பம் பெருக்கிடுமே...