பிள்ளைச் செல்வம்
கட்டித் தங்கம் உருக்கி எடுக்க வரம்
கேட்கவில்லை அன்பு மகளே
உன்னைக் கட்டி அணைக்க வரம்
கேட்டேன்
பட்டு மெத்தை மேல் படுத்து உறங்க வரம்
கேட்கவில்லை பத்து மாதம் உன்னைச்
சுமக்க வரம் கேட்டேன்
கேட்ட வரம் கிடைத்ததும் உணர்ந்தேன்
வலியோடு சேர்த சுகமும் அறிந்தேன்.
மல்லிகை மலரென நீ என் பக்கம் படுக்கையில்
உன் தந்தை தன் கண்ணாலே பாசப் பார்வை
படர விட்டவண்ணம் அமர்ந்தார்.
மலடி என்னும் பாடத்தை விரையமாக்கி
அன்னை என்னும் பதவி கொடுத்த அன்புச்
செல்லமடி நீ.
கவலையுடன் அமர்ந்து இருக்கும் தந்தைக்கு
பல வித்தை காட்டி களிப்பூட்டி கவலையைப்
மறக்கச் செய்யும் போது நீயும் அவர் நெஞ்சில்
அன்னையடி
அன்பு மகளே உனக்கு பட்டு மெத்தை இல்லையடி
பல பொம்மைகளும் இல்லையடி
சுவைத்து உண்ண கனிகளும் இல்லையடி
தொட்டில் கட்ட அம்மா என் சேலையும்
வாரி அணைக்க இரு கரமும்
நீ பசியில் துடிக்கையில் குடிக்கக்
கொடுக்க என் மார்வில் பாலும்
உள்ளதடி என் அன்பு மகளே.