தாய் நீதானடி

புன்னகையை கண்டவுடன்
காதல் வளர்ந்ததடி, உன்
விருபத்துடன் மணந்துகொண்டு
பிள்ளைபெற ஆசையடி.

வீட்டுக் குப்பைத்தொட்டிக்கு
கிறுக்கல் கடிதம் தீனியடி;
நேரில் பேச முடிவெடுத்து
ஒருமுறை துணிவு கொண்டேனடி.

மஞ்சள் வெயில் மாலையிலே
உனைக்காண பூங்கா வந்தேனடி;
புதுக்காதலனை அள்ளி அணைத்து
முத்தமிடுவதை கண்டேனடி.

கற்பனைக் கொஞ்சல் காதலெனில்
செந்தமிழ்மீது வந்ததடி;
இக்கவிதை என் பிள்ளையெனில்
ஈன்றெடுத்த தாய் நீதானடி!

எழுதியவர் : ராஜராஜசோழன் (26-Aug-14, 8:40 pm)
Tanglish : thaay neethaanadi
பார்வை : 154

மேலே