பணத்தேடிகளே

தேசம் விட்டு
தேசம் சென்ற
பணத்தேடிகளே.!
நேசம் விட்டு
காசு தேடுகிறீர்களே!
ரோஷம் மறந்து
சந்தோஷம் கெட்டு
வேஷம் போடுவதுதேனோ?

காசு, பணம்,துட்டு,
மணி, மணி

விட்டு விட்டு
சொல்லாமல்
விடாமல்
சொல்லிப்பாருங்கள்.

வீட்டுப்பிராணிகள்
சபலநீர் விட்டு
அலைப்பாயும்
அப்பாவித்தனம் புரிகிறதா.?

என்ன வளமில்லை
இந்திய திருநாட்டில்?
பஞ்சம் பிழைக்க
அந்நியதேசம் செல்ல
நீங்கள் என்ன
பஞ்சப்பரதேசிகளா?

----
இருக்கும் உறவை சர்வதேசங்களில்
தொலைத்துவிட்டு ஏங்கும் பறவை
மேகலா

எழுதியவர் : மேகலா (27-Aug-14, 7:19 pm)
பார்வை : 79

மேலே