மேகலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மேகலா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Jan-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jul-2014
பார்த்தவர்கள்:  291
புள்ளி:  29

என்னைப் பற்றி...

கவிதை விரும்பி

என் படைப்புகள்
மேகலா செய்திகள்
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Oct-2014 4:38 pm

பின்னர் நால்வரும் சற்றும் தாமதிக்காமல் எழுந்து ஓடி மண்டபத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே போய் கட்டிப் போட்டிருந்த பெண்ணை அவிழ்த்துக் கொண்டு வெளியே வரவும், தூரமாக அந்த தாடிக்காரனின் கூட்டாளிகள் வரவும் சரியாக இருந்தது.

அப்போது.....!!!! ....................

“ஆ “ என்ற அலறல் சத்தம் . ஜீவாவும் ,மற்றவர்களும் சத்தம் வந்த இடத்தைக் கூர்ந்து கவனித்தனர் .மங்கிய நிலவொளியில் தாடிக்காரனின் பிணம் தடுக்கி அவன் கூட்டாளி குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டுக் கிடப்பது தெரிந்தது . “டேய் மாரி ! என்னடா ஆச்சு ? “ மற்றவன் குனிந்து பார்க்கும் வேளையில் .....நால்வரும் அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு மெ

மேலும்

மிக்க நன்றி வேளாங்கண்ணி !! 21-Oct-2014 12:53 am
இந்த பாகத்தை அழகாய் நகர்த்திய விதம் அருமை... கூவாகம் திருவிழா விளக்கங்கள், மகாபாரதக் கதை அனைத்தும் அசத்தல்... மிகவும் அருமை.... 16-Oct-2014 12:37 am
மிக்க நன்றி சாந்தி !! 07-Oct-2014 11:55 am
கதையோடு கூத்தாண்டவர் கோயில் புராணமும் விளக்கிய விதம் அருமை தோழி. இனி அடுத்து என்னவோ?? 06-Oct-2014 10:56 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Sep-2014 9:25 am

அமெரிக்க ஏகதிபத்தியத்தின்
அடிமை விலங்குகளே...

மேல்நாட்டு ஊடகங்களின்
ஊளையிடுதலை செவியேற்று
செவிடான செவிடர்களே...

சாதியப் பிசாசுகளின்
சகுனிப் பிடியில்
சல்லாபித்துக் கிடக்கும்
சபலையர்களே....,

ஐநா சபையை
அநியாயத்துக்கு நம்பித் தொலைக்கும்
அம்மாஞ்சிகளே...

மனிதாபிமானத்துக்கு
புதிதாக நிறம் கொடுத்துப் பார்க்கும்
புத்தி ஜீவிகளே...

மேதாவித் தனத்தில் மிதந்து
கோமாளியாய் போன
ஏமாளிகளே...

அடிமைத்தனத்தை
எதிர்ப்பவரெல்லாம் இங்கு
தீவிரவாதியாம்...

அமெரிக்காவை
எதிர்ப்பவரெல்லாம்
பயங்கரவாதியாம்...

அடிமைத்தனத்தையும்
அமெரிக்காவையும்
எதிர்த்த சிலர் மட்டும்
போராளிகளானார்க

மேலும்

மிக்க நன்றி தோழரே 08-Oct-2014 7:49 pm
மிக்க நன்றி தோழரே 08-Oct-2014 7:47 pm
அற்ப காரணங்களுக்கு போராடுபவனெல்லாம் போராளி தாய் நாட்டை மீட்க போராடுபவன் தீவிரவாதி //அருமை தோழா// 07-Oct-2014 6:33 pm
நல்லா சொன்னீங்க மிக அருமை 05-Oct-2014 7:34 pm
மேகலா - Arun md அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 12:04 pm

திரையுலகினர் உண்ணாவிரதம் பற்றிய உங்கள் கருத்து?

மேலும்

வேறு வழியில்லை, அம்மா ஜாமீனில் வந்த பிறகு தங்கள் தேவைகளுக்காக யாரை நாடுவது, அடுத்த ஆட்சி வரும் வரை. 05-Oct-2014 5:09 pm
நடிக்கரானுங்க. 03-Oct-2014 8:09 pm
Suyanalavathikal...kootam.Neethidurai meethu thakkual..All India judicial method Failed. Vazha India Constution Law. 03-Oct-2014 12:16 pm
அவன் ரெண்டு பொண்டாட்டியையும் நாலு குழந்தைகளையும் யார்ரா காப்பாத்துவா? சுனா பனா காமெடியைப் பார்க்கவும். 01-Oct-2014 10:30 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2014 8:19 am

நீ என் முதல் சகோதரன்
என் முதல் நண்பன்............!!

ஒரு யானையின் பலம்
உன் வார்த்தைகள்..............!!

சிறு பூவின் மேன்மை
உன் அன்பினில்..................!!

கவிதைகளில் அரும்பி
இதையங்களில் பூத்தது நம் உறவு........!!

என் அண்ணாவுக்குப் பிறந்தநாள்..........!

இந்நாளைப்போல எந்த நாளிலும்
இதுவரை உன்னை நான் வாழ்த்தியதில்லை..........!!

வெற்றிகள்
ஒவ்வொரு நாளும் உன்னை முத்தமிடட்டும்

அன்பு
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைக்கட்டும்

மகிழ்ச்சி
எப்போதும் உன்னை சூழ்ந்திருக்கட்டும்...................!!

-இனிய பிறந்தநாள் வாழ்த்த

மேலும்

நன்றி அண்ணா.! 02-Oct-2014 10:24 pm
மிக்க நன்றி ஐயா.! 02-Oct-2014 10:23 pm
நன்றி shree 02-Oct-2014 10:22 pm
நன்றி சகோ.. 02-Oct-2014 10:21 pm
மேகலா - David அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2014 5:41 am

பரிசு பெற்றவை கீழிருக்கும் கவிதைகளில் சில வைரமுத்து, தபூ சங்கர், வாலி வரிகளை மாற்றியமைத்து பரிசு பெற்றிருப்பதாக இருக்கிறது.

காக்கைகளின் கவனத்திற்கு. - கொஞ்சம் தேநீர் நிறைய வானம் பாதிப்பு

ஓடிப்போகாதீங்க. - விஜயலட்சும் நவநீதகிருஷ்ணன் பாதிப்பு.

என் மழைத் தோழியுடன் - தபூசங்கர் -வைரமுத்து கலவை

மேலும்

அப்படியா..? சரி ஆரம்பிங்க. ஐ ம் ரெடி. 02-Oct-2014 7:38 pm
உங்க எண்ணத்துக்குதான் இந்த எண்ணமும்....!! உங்களுக்கு இல்லை உங்க வீட்டு செவத்துல நீங்க எழுதினா கீழ யாரும் எழுதப் போறதில்லை... இங்க.............! எழுதுவாங்க... இங்கிட்டும் டேப் இருக்குங்க...!! இதே மாதிரி தான் எரிச்சலா இருக்கும் எல்லாத்துக்கும்.... !! அவங்களுக்கு தோன்றத அவங்க எழுதுறாங்க அதுல உங்களுக்கு என்ன சிரமம்.........? 02-Oct-2014 7:01 pm
இருப்பதை சொன்னா உங்களுக்கு ஏன் கோவம். நான் சண்டை போட வரல. 02-Oct-2014 5:59 pm
எனக்கு தோன்றுவதை நான் சொல்றேன் . இதுல உங்களுக்கு என்ன சிரமம்.? இதுக்காக கூட்டமா வந்து பெரிய ரகள பண்ணுவீங்களோ. எண்ணம் டேப்ல என் எண்ணம். இதுக்கு யாருடைய விளக்கமும் தேவ இல்ல. 02-Oct-2014 5:58 pm
மேகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 7:19 pm

தேசம் விட்டு
தேசம் சென்ற
பணத்தேடிகளே.!
நேசம் விட்டு
காசு தேடுகிறீர்களே!
ரோஷம் மறந்து
சந்தோஷம் கெட்டு
வேஷம் போடுவதுதேனோ?

காசு, பணம்,துட்டு,
மணி, மணி

விட்டு விட்டு
சொல்லாமல்
விடாமல்
சொல்லிப்பாருங்கள்.

வீட்டுப்பிராணிகள்
சபலநீர் விட்டு
அலைப்பாயும்
அப்பாவித்தனம் புரிகிறதா.?

என்ன வளமில்லை
இந்திய திருநாட்டில்?
பஞ்சம் பிழைக்க
அந்நியதேசம் செல்ல
நீங்கள் என்ன
பஞ்சப்பரதேசிகளா?

----
இருக்கும் உறவை சர்வதேசங்களில்
தொலைத்துவிட்டு ஏங்கும் பறவை
மேகலா

மேலும்

வணக்கமுங்க..... நா ஒரு பணத் தேடிங்க... அதாவது பாருங்க... எந் தலமொறை தலமொறையா என் குடும்பம் வெவசாயக் குடும்பமுங்க.... அப்பன்.. பாட்டனெலாம் வாழ்ந்த காலமுங்க.. என்ன வளம் பெருகிருச்சின்னு தெரியல... தண்ணிய நிப்பாட்டிப்புட்டாய்ங்க.... அட.. கருமம் போகுதுன்னு பூமியை தொளைச்சி எடுத்துக்கலாமுனா அதுக்கு எதோ அனுமதி வாங்கனுமாம்.. கரண்டு வாங்கனுமாம்... அரசாங்கம் சொல்லுந்துங்க... அதுக்கு மேசைக்கி அடில குடுக்குற பணம் வயல்ல மொளைக்கலைங்க... அட... நாமத கஷ்டப்பட்டோம்.. வெளையாத மண்ணு இருந்தென்ன... இல்லாமென்ன ன்னு வித்துகாசாக்கி என்னமோ கம்பியூட்டர் படிப்பாமுல்ல.. அதை படிக்க வச்சா எம்புள்ள சோதனைக்குழாயி... வகைநுண் கணிதமுன்னு படிச்சிபுட்டு எதோ ஒரு வழியா அதையும் தட்டு தடுமாறி முடிச்சிபுட்டு டவுனுக்கு வேலைக்கி போகுதுங்க... அங்க என்னமோ இங்கிலீசு பேசுனாதா வேலையாமில்ல... அதும் இப்படித்தா பேசனுமின்னு எதோ வரமொறையும் இருக்காமுல்ல.. பயபுள்ளை உப்புபோட்டு சோறு தின்னது பாருங்க.. நடிக்க தெரியாம ஊட்டுக்கு வந்திர்ச்சிங்க.. படிச்சதும் புரியாமா.. புரிஞ்சதயும் படிக்காம எங்க புள்ளைக படுற பாடு இருக்கே...... என்னத்த சொல்ல.. கவுரவமா வாழ்ந்து பழகிடோமுங்க.... என்னமோ வெளிநாட்டு அடிமை வேலைக்கி ஆளு எடுத்தாங்களாம்.. நல்ல சம்பளமாம் ... என்னோட மண்ணு எனக்கு சோறு போடலைங்க.. எம்மயன் படிப்பும் கை விரிச்சிரிசிங்க... இங்கயும் ஒழைப்புதானுங்க.... என்னால எஞ் சனம் மூணுவேளை சாப்புடுதுங்க... அங்க சம்பாரிச்சத இங்க தொலைக்க நா என்ன நடிக மகராசாவா....? இல்லை.... நாட்டுக்கு தலைவராங்க..? எதோ காஞ்சி போன கழனிக்கு சொந்தக்கார விவசாயப் பணத் தின்னி... இல்லல்ல... பணந் தின்னி... சரிதானுங்களே..?!! 02-Oct-2014 7:14 pm
உங்களுடைய ஏக்கம் புரிகிறது...தங்கள் கவிதையில் பணத்தேடிகளே என்பதற்கு மாறாய் 'பணந்தேடிகளே ' என்று இருப்பதுதான் மிக சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். 02-Sep-2014 2:31 pm
மன்னிக்கவும் தோழி ! அயல் நாடு செல்ல்பவர்களில் பலர் தங்களது பிரிய உறவுகளின் எதிர்காலத்தை எண்ணியே தங்கள் உணர்வுகளை பூட்டி, ஓடி உழைக்கிறார்கள் ! நம் நாட்டை அவர்கள் இழிவு படுத்தும் நோக்கில் அங்கு செல்வதில்லையே அது தங்களுக்கு தெரியாதா என்ன ? தங்கள் படைப்பு அருமை தோழி ! கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மன்னிக்கவும் ! 31-Aug-2014 9:26 am
நிஜம்!! 30-Aug-2014 9:41 pm
மேகலா - எண்ணம் (public)
27-Aug-2014 6:14 pm

:) ஆமா தானே..?

மேலும்

மேகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 11:58 am

மெய் எழுதும் கவிஞர்கள்
மை வைத்து காத்திருக்கிறார்கள்.

மயில் ஏதும்
மடியில் வீழும்.
தோழி என்றும்
காதலி என்றும்
உறவுக்கொண்டு
பறக்கப்பார்க்கிறது
பொய் மனமுடைய
கவிஞர்களின் புத்தி.

எப்போது பிறந்தார்கள்
அறிவிக்க துணிவில்லை
இவர்கள் கவிஞர்களாம்!

ஏன் மறைக்கவேண்டும்
கவிஞனின் மனதை பாருங்கள்
தெரியும் பித்தலாட்டம்!

இல்லற சுகம்
திருப்தியின்றி
ஊர்மேய்கிறது
அலைபாயும்
அற்பர்களின் மனம்
இதில் ஏமாந்து
மயங்கி சாகிறது
பேதைகளின் மானம்

பேசி மயக்க
ஒரு பெண்
ஊர் சுற்ற
ஒரு பெண்


கவிதைகள் பொய்
அது அழகு
கவிஞர்கள் பொய்
அது அழுக்கு.

பென் பிடித்து எழுதுபவர்களுக்கு
பெண் பித

மேலும்

பொய்யை ரசி! அதை சொல்பவனை மேலும் ரசி!!!... அப்பொழுது தான் உண்மையானவர்களை உணர முடியும்... கவிதை அருமைங்க 02-Oct-2014 9:30 am
ஹா ஹா நல்ல தாக்கு கவிஞர்களைப் பற்றி.... நன்று... வாழ்த்துக்கள்.... 27-Aug-2014 3:31 am
ரொம்ப ரொம்ப தேங்கஸ்மா. பீல் பண்ணிட்டேன் 26-Aug-2014 6:37 pm
தொல்லை ஏதும் இல்லங்க. பொதுப்படையா எழுதினேன். நன்றி மகேஷ்வரன் 26-Aug-2014 6:34 pm
மேகலா - மேகலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2014 12:24 pm

முன்னொரு நாளில் காதலனாய்
இனித்தாய்
அன்றொரு நாள் விரோதியாய்
கசந்தாய்
ஏனடா. ஏனடா
பழகிய நம் நாட்கள் புளித்ததோ?
உரசிய என் தேகம் கசந்ததோ ?
முத்தத்தின் ஈரத்தில் பதமில்லையோ?

விட்டுசென்றால்
பதறிபதறி துடிக்க
நான் கண்ணகி அல்ல டா..!

நவீன யுவதி.

சரிதான் போடா
என் காதலா.

(மேகலா)

மேலும்

சும்மா நச் சுனு இருக்கு தோழி 25-Aug-2014 2:22 pm
எப்பா என்ன கோவம்...நல்ல அருமையான கோவம்..சுவையாய் எங்களுக்கு ஒரு கவிதை தந்து உள்ளது.. நவீன யுவதி..உங்கள் நவீன கவிதை நன்றாக உள்ளது.. 21-Aug-2014 2:16 pm
மேகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2014 12:24 pm

முன்னொரு நாளில் காதலனாய்
இனித்தாய்
அன்றொரு நாள் விரோதியாய்
கசந்தாய்
ஏனடா. ஏனடா
பழகிய நம் நாட்கள் புளித்ததோ?
உரசிய என் தேகம் கசந்ததோ ?
முத்தத்தின் ஈரத்தில் பதமில்லையோ?

விட்டுசென்றால்
பதறிபதறி துடிக்க
நான் கண்ணகி அல்ல டா..!

நவீன யுவதி.

சரிதான் போடா
என் காதலா.

(மேகலா)

மேலும்

சும்மா நச் சுனு இருக்கு தோழி 25-Aug-2014 2:22 pm
எப்பா என்ன கோவம்...நல்ல அருமையான கோவம்..சுவையாய் எங்களுக்கு ஒரு கவிதை தந்து உள்ளது.. நவீன யுவதி..உங்கள் நவீன கவிதை நன்றாக உள்ளது.. 21-Aug-2014 2:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

user photo

குமரகுரு

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Anjana

Anjana

Jaffna, Sri Lanka
அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (29)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (29)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சிவா

சிவா

Malaysia

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே