என் மனம் துள்ளுகிறது

ஓவிய தூரிகை
நிறத்தை துகிலுரிக்க !
தூங்காத விழிகள்
தூக்கத்தை துகிலுரிக்க !
மின்னும் இதழ்கள்
பேச்சை துகிலுரிக்க !
அதை,
கேட்ட என் செவிகள்
நினைவினை
துகிலுரிக்க !
உன் கண்களோ என்னை கிள்ளுகிறது !
என் மனமோ,
உன்னை காதலிக்க துள்ளுகிறது !

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (28-Aug-14, 10:33 am)
பார்வை : 62

மேலே