என்னவன்

மாலை நேரத்தில்
மயங்கி நின்றேன்
மயில் தோகையின் வாசம் என்றேன்
மணாளன் என்னை கடந்து சென்றதை அறியேன் !!

என்னை மயக்கிய
கண்ணனை தேடினேன்
பார்த்ததும் மனதை தொலைத்து விட்டேன்
முதன் முதலாய் காதலில் விழுந்துவிட்டேன் !!

ஓர பார்வை வீசி
மனதை தொட்டு விட்டான்
மணத்தால் மயக்கி விட்டான்
மண்ணோடு வாழும் வரை
மன்னனின் மார்பில்
மயங்கி கிடக்க
மனதார வேண்டுகிறேன்
மானுட (கண்ணனை) தெய்வத்தை !!

எழுதியவர் : யாதிதா (1-Sep-14, 2:49 pm)
Tanglish : ennavan
பார்வை : 108

மேலே