பழம் நீ அப்பா

சிறுமலைப் பழம்ஒரு சீப்பும்
பலாப்பழச் சுளைகள்
பத்துப்பன் னிரண்டும்
சிவந்த ஆப்பிள் ஐந்தாறும் தின்றபின்
மாம்பழம் இங்கே வரத்தில் லையோ
என்று கேட்டவாறு
இருமிக் கனைத்துப்
பாகவதர் கனிந்து
பாடத் தொடங்கினார்:
"பழம்நீ அப்பா பழம்நீ. . . "
அப்பன் முருகன் அலறி ஓடினான்