பள்ளிக்கூடம்

படிக்காமல்
அடிக்கடி அடி வாங்கியதும்....
எழுதாமல் பலநாள்
முட்டிப் போட்டதும்....

பலநாள் அடம் பிடித்து
போக மறுத்த
பள்ளிக்கூடமும்....

சில நாள்
பார்த்து பயந்த
ஆசிரியரும்....

ஒரு கனம் நினைத்து
பார்த்தால்...
எனக்குள் சிரிப்பு
வருகிறதே...

கிடைக்காத
இந்த வாழ்க்கையை
நினைத்து...

மீண்டும் ஒருமுறை
வாழ்ந்து பார்க்க
ஆசைபடுகிறதே..
இந்த இதயம்....

எழுதியவர் : மணிமாறன் (5-Sep-14, 2:08 pm)
சேர்த்தது : drums mani
Tanglish : pallikoodam
பார்வை : 196

மேலே