பெண்ணே நீ கலங்காதே

பெண்ணே நீ கலங்காதே ..!

கல்யாணம் ஆகாதே பெண்ண -நீ
கண்ணீர் வடிப்பதென்ன ..?
பூட்டிய வாழ்வு சிறைக்குள்ளே -நீ
புழுங்கி அழுவதென்ன ...?

வேலைக்கு கள்ளம் கொண்டவன் -உன்னிடம்
வேண்டியே சீதனம் கேட்பான்
வாங்கிய சீதனம் தீர்ந்ததும்
வள்ளியே உன்னை காலில் மிதிப்பான் ..

தேவையில்லை இந்த வாழ்வென்று -நீ
தேம்பி அழுவதென்ன ..?
வேலையில் லாதவன் செய்யும் தொழிலது
வேண்டியே தினம் தான் செய்வான் ...

ஆளுமை யுள்ளா னொருவன் வந்துன்னை -இந்த
அடிமையில் இருந்து மீட்பான்
வாடிய பெண்ணே நாளை யுந்தன் வாழ்வு
வசந்தமாகும் பாரு ...

தேடியே வந்த வரெல்லாம் -உன்னை
தேவை இல்லையென எறிந்தனரோ ..?
பாவையே உனக்குள்ளொரு இதயமுள்ளதை
பார்க்க மறந்து போயினரோ..?

நாளுமேநீ எறிந்த கண்ணீருக்கு
நல்ல வாழ்வு வரும் பெண்ணே
பாவம் நீ என அறிந்து உன்னை மணக்க
பாவலன் வருவான் பாரு கண்ணே ...!

வன்னி மைந்தன்

எழுதியவர் : வன்னி மைந்தன் (7-Sep-14, 7:55 pm)
பார்வை : 128

மேலே