வெண்ணிற ஆடையில் தேவதை

..."" வெண்ணிற ஆடையில் தேவதை ""...

திட்டு திட்டாய் வெண்மேகம்
பூமியிலே முளைத்ததென்ன
இயற்கையின் இன்பக்காட்சி
இலைகளை மகுடம் சூட்டியே
வெண்பனி முத்தாய் தூவானம்
விடியலையே தள்ளிவைக்கும்
வித்தையரிந்த வித்தக வில்லன்
பச்சை பாய்விரித்து புல்லின்மீது
மல்லிகை சரமாய் கிரீடமானாய்
தேகத்தை குளிர்வித்தே வெப்ப
தேவையைதனை அதிகமாக்கி
கம்பளியோடு கலந்துரையாடல்
கட்டியணைத்திட முடிவானது
தீயின் எதிரி தீண்டலின் நண்பன்
உலக உயிரின பெருக்கத்தின்
உந்து சக்தியின் முதலாமவன்
உன் காலத்தை நான் உச்சரிக்க
உள் எண்ணத்திலும் குளிர்ச்சி
வெண்ணிற ஆடையில் தேவதை
அழகே உன் பெயர் பனிக்காலம் ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (13-Sep-14, 3:38 pm)
பார்வை : 290

மேலே