இனிய காயம் இதுவோ - இராஜ்குமார்

இனிய காயம் இதுவோ ?
==================
இதயக் கூட்டில்
நீ செய்த காயம்
இனிமையின் இதம்

இதோ வெளியேறும்
இரத்தம் வேண்டிக்
கொள்கிறது உன்னிடம்

மீண்டும் நீயே
காயம் செய்வாயாக
நீ வாழும்
என் இதயத்தை ..!!

உன்
புன்னகை எனும்
முட்புதரைக் கொண்டு

இதய கணுக்களில்
இனிய காயத்தை
இன்று தருவாயா ?

இல்லை ....
மதிய வேளையில்
மீண்டும் வந்து
மருந்து இடுவாயா ?


- இராஜ்குமார்

நாள் : 28 - 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Sep-14, 7:31 pm)
பார்வை : 94

மேலே