nee

என் கண்ணில் தோன்றும்
காட்சிகளெல்லாம்
நீயாகிவிடுவதாலோ!

என் செவிகளின் வழி
நுழைவதெல்லாம்
உன் குரல் என்பதாலோ!

என் எண்ணங்களின்
வெளியெல்லாம்
நீ நிறைந்து வழிவதாலோ!

உனக்குள் உறைகிறது!
என் உலகம்!!...

எழுதியவர் : thenkavi (17-Sep-14, 3:32 pm)
சேர்த்தது : பிரியா
பார்வை : 93

மேலே