இதயமடிப் பெண்ணே இதயம்

நீ மூச்சுவிடும் போதெல்லாம்

நான் மூர்ச்சையாகும்படி சாபமிட்டது

யாரடிக் கண்ணே .... !!!

உனது இடைவெட்டில் அடைபட்டுப் போன

எனது இதயத்தை மீட்டெடுக்க

எந்த போர்க்கருவியும் பயன்படாது போலிருக்கே ?

இருந்துவிட்டுப் போகட்டும் என்று

உன் இடையிலேயே விட்டுவிட்டுச் செல்ல

அது என்ன இரவல் பொருளா?

இதயமடி பெண்ணே இதயம் .... !!!

எழுதியவர் : (21-Sep-14, 12:08 am)
பார்வை : 85

மேலே