தியாகதீபம் திலீபன்

எவனடா சொன்னது- தமிழனுக்கு
ஆயுதப் புரட்சியிலே ஆர்வம் என்று...

நாங்களும் தொடங்கினோம்- அகிம்சையில்.
உண்ணாநிலை வாயிலாய்....

இனத்தின் நிலை புரியவைத்தான்....
பன்னிரு நாட்கள் அவனது ‪#‎பட்டினி‬ ‪#‎நெருப்பு‬,
பற்ற வைத்தது- எம் இனப்பற்றை....

உறங்க மறுத்த உனது கண்களால் மூட்டினாய்-
விடுதலை வேள்விக்கு கனலை...

அரச பயங்கரவாதம் மிதித்துப் போட்ட உரிமையை-
மீட்டெடுக்கச் சொன்னாய்...
மலர வேண்டினாய்- ஈழம்...

வந்தான் - நம் தலைவன்...
இலக்கை நோக்கி நடந்தான்- ஆனால் வேறு பாதையில்...
ஆயுதம் தேவை என்ற அவனது பார்வை- தேவையாய் இருந்தது..

அவன் உணர்ந்திருந்தான்- பெயர் தான் வேறு வேறு...
ஜெயவர்த்தனே, சந்திரிகா, ராஜ பக்சே என்று...
உள்ளத்தால் அத்தனையும், காட்டேரி நரிகள் என்று...

புத்தன் பிறந்த பூமியும், புத்தனைப் போற்றிய பூமியும்-
சேர்ந்து சமைத்தது- ‪#‎கூட்டான்சோறு‬
நம் இனத்தின் ‪#‎பிள்ளைக்கறியால்‬...
நம் இனத்தின் ‪#‎ரத்தம்‬- ஈனர்களின் ‪#‎மதுக்‬ குவளையில்...

இருபத்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும்-
காட்சிகள் மாறவில்லை...கண்ணீர் தீரவில்லை...

"விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றாய்"
‪#‎கண்ணெதிரே‬ தெரிவதெல்லாம் காட்சிப் பிழைகள் மட்டுமே....

ஆனாலும் தியாகச் செம்மலே....
வருவான் ‪#‎மீண்டும்‬ ‪#‎வருவான்‬ ‪#‎நம்‬ ‪#‎தலைவன்‬

நீ ஏற்றிய தீபத்தில், ஈழம் காட்டுவான்...
நாடற்ற நாதியற்ற கூட்டத்திற்கு வைகறை வரும் அன்று...

எழுதியவர் : டேனியல் சுந்தரையா (23-Sep-14, 7:53 pm)
பார்வை : 372

மேலே