இன்று மறக்க முடியா நாள்

தோழமை நெஞ்சங்களே...
இன்று நான் இருந்த அரங்கினில் மாகவிக்கான விழா நிகழ்ந்துக் கொண்டிருந்தது.....
இன்றுதான் எப்படிப்பட்ட காத்திருப்பு...காத்திருத்தல்தான் எத்துணை சுகமானது...முளைப்பதற்கு விதையின் காத்திருப்பு...தாய்ப்பறவையின் வருகைக்கான குஞ்சுகளின் காத்திருப்பு..ஒரு விடுதலைக்கான அடிமைகளின் காத்திருப்பு....ஒட்டிய வயிற்றின் ஒரு கவள சோற்று உருண்டைக்கு....ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடு என்பதற்கான .முழக்க ஒலிக்கான வீரனின் காத்திருப்பு... .....தீர்ப்புக்கான நியாயத்தின் காத்திருப்பு...
எனக்கான காத்திருப்பு எது தெரியுமா..? ...விழாவிற்கு ..விருது பெற தோழர் ராஜேஷ்குமார் வருவாரா...என்பதற்கான காத்திருப்பு அது...!!
வந்தார்....இல்லை இல்லை வந்தார்கள்...முதலில் மூவர்....பிறகு ..பிறகு...
ராஜேஷ்குமார்....!!!!
ஆனால்....வந்தவர் ரமேஷ்குமார்....(ராஜேஷ்குமார் போலவே...இரட்டையராம் அவர்கள்...!!.)
எத்துணை மகிழ்ச்சி மடிப்புகள்.. ...உவகையின் உச்சம்....பூரிப்பின் பூபாள வழிசல்....இன்று காலை 10மணி முதல்...இந்த நிலை பிற்பகல் 2.30 வரைக்குமே..3மணி வாக்கில் அறிவிப்பு வந்தது....
எழுத்தாணி விருது பெற எழுத்து.காம் திரு ராஜேஷ்குமார் அவர்களை மேடைக்கு அன்புடன் அழைக்கின்றோம்.....
இலக்கிய மறவர் விருது பெற புதுச்சேரி தி.அமிர்தகணேசன் அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கின்றோம்....
எழுத்து.காம் தமிழுக்கான அருஞ்சேவைக்கு என விருது பெற தோழர் ரமேஷ் மேடைக்கு வந்தார் ...பெற்றார்....
"நல்ல தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றீர்கள்...வாழ்த்துக்கள்.." .மகாகவி வாய் மலர்ந்து வாழ்த்தினார்...
அதன் பிறகு பரபரப்பு படர்ந்தது...சென்னை முழுமையிலும்..
அதன் பிறகு தீர்ப்பு வெளியான செய்தி அடர்த்தியாக படர்ந்தது..
பலரும் இல்லம் ஏகிட அணியமானர்...
எனது மகிழூந்தில் தோழர்கள் ரமேஷ்...பிரகாஷ்...சேவியர்...பரகத்துல்லா...என நாங்கள் பயணப்பட்டோம்...மத்திய புகைவண்டியகத்திற்கு 20 நிமிடங்களில் சென்றடைய வேண்டிய நாங்கள் இன்று 1மணி 30 நிமிடத்தில் சென்றடைந்தோம்...!!! வழியில் பதட்டமும்...(இதன் பிறகு எனது குடும்பத்தினரை நான் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே..-நாளை அங்கு ஒரு நிகழ்வில் பங்கு பெற வேண்டும்.. ). பரபரப்பும்....
"எழுத்து.காம் இன்று பல அறிஞர்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு பெற்றுள்ளது...நன்றி அய்யா...இந்த நாளை வாழ்க்கையில் மறக்க முடியா வகையில் நெஞ்சில் இடம் பெற்றுள்ளதே.. "..நெகிழ்ந்த தோழர் ரமேஷிடம் விடை பெற்று புதுச்சேரிக்கு இரவு 9 மணியளவில் முழுமையாக வந்து சேர்ந்தோம்.......
"அய்யா ..புகைவண்டியில் அமர்ந்து விட்டோம்..மின்னஞ்சலில் படங்கள் அனுப்பியுள்ளேன்..பெறுக.."என தோழர் பிரகாஷ் சொன்ன செய்தி எனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.....
எனினும் இன்று மறக்க முடியா நாள்...!!!