சன்னல் உன்னால் மின்னலாகுது - இராஜ்குமார்

சன்னல் உன்னால் மின்னலாகுது
==============================

வரப்பு வலுக்கும்
வாய்க்கால் ஓரம்
சிந்தனை உன்பாதச் சுவடாகுது ..!

கோவில் ஏறும்
படியின் மேலும்
கற்கள் உந்தன் கண்ணாகுது .!

நீ தொட்டுப்போன
வண்டியின் பாகம்
நேற்று பிறந்த குழந்தையாகுது ..!

கவிதை படித்த
கதவின் ஓரம்
சன்னல் உன்னால் மின்னலாகுது ..!

- இராஜ்குமார்

நாள் ; 31 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Sep-14, 10:56 pm)
பார்வை : 93

மேலே