விழியை விரட்டாதே - இராஜ்குமார்

விழியை விரட்டாதே
====================

கண்கள் இருண்டன - உன்
நினைவுகள் திரண்டன

நினைவுகள் குறைவு - அதை
மீட்டுவதில் மனநிறைவு

கோவை செல்லும் பயணம்
பாவை உன்விழியே பாதையாய்

அறைக் கதவை எட்டு
மணிக்கே மூடிவிட்டேன்

இமைக் கதவை இன்னும்
இறுக்க முடியவில்லை

உருக வைக்கும் நினைவுகள்
ஓய்வை சிதைத்து
உறக்கம் உடைத்து
விழியை மட்டும் விரட்டுதடி ..!

- இராஜ்குமார்

நாள் : 4 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Sep-14, 6:02 pm)
பார்வை : 116

மேலே