கடலோடு ஒரு நாள்
ஓசையுடன்..
கடல் அலை.!!!
காற்றோடு..
கடற்கரை.!!!
கடலோர...
சிப்பியும்,
கரை புரண்ட..
முத்தும்,
நீந்தி குளிக்கும்..
மகிழ்ச்சியில்..!!!
அலைகண்டு..
ஓயாத ஓடம்..!!!
ஓய்ந்த பின்பும்..
நனையவரும் வலைகள்.
ஓடி நனைக்கும் கால்களும்..
ஒய்யார கூச்சலும்..
ஒத்தராக பாடலும்..
கிண்டல் பேச்சும் ..
ஏலன கேலியும்..
வீடு வந்தால்,
மறைந்துபோகும்..!!!
எத்தனையோ மீன்கள்..
வகை வகையாக..!!!
வெட்ட வெளி மணல் - அதில்,
காய கிடக்கும் கருவாடு..
ஆழம் செல்ல காத்திருப்பான்,
காலைபொழுது கஞ்சியுடன்.
எங்கே..?
சங்கு - என்று,
எடுத்துக்காட்டும்
கண்ணாடியோடு..
மகிழ்ச்சியில்..
முக்குளித்து,எந்திரித்து..!!!
மறு மறுக்கு, மறுக்கி..!!!
சங்கு தேடும்..
தோரணையில்..!!!
திடுக்கிட வைக்கும்..
திருக்கைகள்..!!!
கடல் அட்டை..
கட்டில் கட்ட..!!!
சிங்கியுடன், எறால்களும்,
கடல் பள்ளியுடன், குதிரைகளும்
பாசியுடன், பயிர்களும்...
வலைக்குள் வந்துவிட்டால்..!!!
நண்டு கண்டு..
கால் முறிக்க - கணவாய்
கூந்தல் கண்டு..
நாக்கு ஊர..!!!
ஊற்றெடுக்கும், அன்பு..
வீட்டில் தான் தெரியும்..!!!
சொல்லில்வைத்தாள் புரியாது,
செய்திருந்தால் ரசிப்பாய்.(சீனி)