( செந்திலின் )மரணப்படுக்கையில்

வழிதுனையாகவாவது என்
வாழ்வில் வந்தாய்....
மாற்றல் என்று என்
இதயத்தில் இடியை
இறக்கி விட்டு சென்றாய் ....
வழி தெரியாமல்
விதிர்த்து நிற்கின்றேன் ...
இனி உன்னை
எப்போது காண்பேன்
எப்படி காண்பேன் ...
மௌனமாய் என்னுள்
துளிர்த்த என் காதல்
என்னுள்லேயே மரித்து போனது ......
உன் பார்வைகள் அவ்வப்போது
என்னை தீண்டியதும்
உன் புன்னகைகள் அவ்வப்போது
என்னை பரவசப்படுத்தியதும் .....
உன்னோடு பயணித்த நிமிடங்களும்
என் வாழ்வில் என்றும் என்னை
தொடரும் நீ இன்றி....
மரணப்படுக்கையிலும் மறந்து போகாது
உன் நினைவுகள் .....


எழுதியவர் : செந்தில் சேலம் (29-Mar-11, 1:51 pm)
பார்வை : 468

மேலே