அன்றும் இன்றும்
அன்றும் இன்றும்.
இன்னொரு சுதந்திரம் என்பது கோசமே!—அது
முன்னெடு முன்னேறு வாழ்க தேசமே!—இது
முன்னொரு மந்திரம் தாயை வணங்குவோம்.—அது
சொன்னது தந்திரம் இன்றது முழங்குவோம்.
பச்சிகள் வெள்ளையும் வந்தன ஆண்டன---இன்று
கட்சிகள் கொள்ளை கொண்டன தின்றன.—அன்று
உச்சம் உயிரென எத்தனை தியாக.ம்!—இன்று.
மிச்சம் மயிரென இத்தனை சோகம்!.
தியாகம் ஒன்றே பொது வாழ்வாக---பழைமை
தேர்ந்த அரசியல் தூய்மை அன்று---புதுமை
தலைமை குடும்ப நலமே கொள்கையாக---பழைமை
தொலைத்து தானே வாழ்வது இன்று.
அரசியல் கட்சிகள் ஆயிரம் முளைத்தன—அவை
ஆளுக்கு ஒன்றாய் இலாபம் கருதின---எவை
பங்கு பகிர்வதில் சங்கம் அமையுமோ—அவை
முந்தும் கூட்டணி என்று மயக்கின.
நாய்களென்றும் தமக்குள் நட்பும் கொள்ளாது---அதுபோல்
நாடக அரசியலும் கூடியொன்றில் நில்லாது.---இதுபோல்
ஒன்றை ஒன்று ஒழிக்கும் பொல்லாது---அதுபோல்
நன்றி என்றுமொரு வாசலும் செல்லாது.
பொய்யது ஒன்றே மெய்யது என்றே---அந்த
வாயது கொண்டே மேய்வது வென்றே—இந்த
அய்யோ மக்கள் ஆய்வது மறந்தே---அந்த
வெய்யது அரசியல் வாழுதே தொடர்ந்தே!
கொ.பெ.பி.அய்யா.