+ஆதலினால் படைத்திடு கவிதை+

புத்துணர்ச்சி கொடுக்கும் புத்தியை தெளிவிக்கும்
அத்திப்பழச் சுவையை மொத்தமாக அளிக்கும்
காதலிக்க வைத்து பேதலிக்கச் சொல்லும்
ஆதலினால் படைத்திடு கவிதை!

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

தூக்கத்தை களைவித்து ஊக்கத்தை விளைவிக்கும்
ஆக்கத்தை பயிர்வித்து அற்புதங்கள் அறுவடைக்கும்
கனவினை குத்தகையெடுத்து கற்பனையைக் குடியேற்றும்
நன்மைக்காய் படைத்திடு கவிதை!

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

மின்சாரம் இல்லையெனினும் மின்சாரமாய் பாயும்
மண்சாரும் கலாச்சாரம் மண்ணுலகம் பரப்பும்
மழையில்லா காலத்திலும் மனதினைக் குளிர்விக்கும்
தெளிவடைய படைத்திடு கவிதை!

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

இசையாக இனிக்கும் இசைவோரை இணைக்கும்
அசையாத உள்ளத்தையும் ஆழம்பார்த்து அசைக்கும்
பசையாக மொழிப்பற்றை பக்குவமாய் ஒட்டவைக்கும்
ஆசையுடன் படைத்திடு கவிதை!

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

நட்புகளின் பாலமாக நற்கவிதை விளங்கிடும்
நாட்டுநடப்பை நான்குவரியில் நருக்கெனவே விளக்கிடும்
நாளும் நம்வயதினை குழந்தையாக்கி குறைத்திடும்
நாமும் படைத்திடுவோம் கவிதை!

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Oct-14, 9:44 am)
பார்வை : 133

மேலே