நீர் தீர்ப்பு

வயலுக்கும், வரப்பிர்க்கும்,
வழக்காடியது போதாதென்று,
நீருக்கும் நீதி கேட்டு செல்கின்றோம்,

வழக்காட வழியின்றி
வானத்தை பார்க்கிறேன்...
நீதிமன்றத்தின் நீர் தீர்ப்பு,
நீர்த்துப்போயினும்...

வான் மன்றத்தின் இடிமுழக்கமாவது
இன்பம் சேர்க்காதா என்று...

எழுதியவர் : மயில்வாகனன் (11-Oct-14, 10:42 am)
பார்வை : 217

மேலே